Wednesday, December 14, 2022

மன அமைதியுடன் வாழ ......

 உங்கள் செயல்பாடுகள் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

நீங்கள் கடவுளாக இருந்தால் கூட பொறாமையால் உங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவோரும் உண்டு.
உங்கள் மனதில் யார் கல் எறிந்தாலும் கடுஞ்சொல் எறிந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
நீங்கள் கவலைப்படுவதால் எதுவும் மாறாது.உடல் நலன்தான் கெடும்.
யார் கலக்கினாலும் கலங்கும் குளத்தை யாராலும் தெளிய வைக்க முடியாது.
அந்தக்குளம் தன்னைத்தானே தெளிய வைத்துக் கொண்டால்தான் உண்டு.யாராலும் தெளிய வைக்க முடியாது.
உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை யார் கூறினாலும்,
உங்களைச் சின்னச் சின்ன விசயங்களுக்காக சம்பந்தமே இல்லாதவர்கள் அவமானப் படுத்தும் போதும் அமைதியாகக் கடக்க மனதைப் பழக்கப் படுத்துங்கள்.
வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...