Sunday, December 18, 2022

ராகுல் காந்தி:

 "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" .

இந்தியாவின் ரா கொடுக்காத உளவுத்தகவலை
அமெரிக்காவின் சிஐஏ கொடுக்காத எச்சரிக்கையை
இஸ்ரேலின் மொஸாட் கொடுக்காத துப்பினை
ரஷ்யாவின் எஃப்எஸ்எஸ் கொடுக்காத குறிப்பினை
ராகுலுக்கு யார் சொல்லி இருப்பாங்கன்ற சந்தேகம் வருதா உங்களுக்கு?
காத்மாண்டு,நேபாளத்தில் இருக்கும் மதுபான விடுதியில் நடந்த பார்ட்டியில் சீன தூதரக அதிகாரியுடன் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியதே.
ஒருவேளை அந்த அம்மணி சொல்லி இருப்பாங்களா?
அதெல்லாம் ஒன்னும் இல்லிங்க.
'இது தான் காங்கிரஸின் ஈனத்தனமான அரசியல் தந்திரம்.'
எல்லையில் சீன ராணுவ அத்துமீறல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக அவையை காங்கிரஸ் முடக்கியதும் கூட அதன் அரசியல் போக்கினையே கட்டியம் கூறுகிறது.
ஏன் சீனாவை பற்றி பேசியபடியே இருக்கிறது காங்கிரஸ்?
அது தான் தந்திரத்தின் உச்சம்.
'சீனா மிகப்பெரிய வல்லரசு. நமது இந்தியா அவர்களை எதிர்கொள்ளும் வலிமையற்ற மிகவும் சாதாரணமான நாடு தான்'
என்ற நினைப்பை மக்களின் மனதில் அழியாமல் ஆளப்பதித்திட வேண்டும் என்பதால் தான் காங்கிரஸ் தொடர்ந்து சீனாவை பற்றி பேசியபடியே இருக்கிறது.
இந்த கண்ணோட்டம் மக்கள் மனதில் பதிந்து விட்டால்,
அவர்களை அறியாமலே ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகும், தேசம் அபாய கட்டத்தில் உள்ளதென்ற பயம் உருவாகும்.
இந்த பயம்
பாஜகவின் மோடி கட்டமைத்து வரும் வலிமையான இந்தியா என்ற சுதந்திர சிந்தனையை அடக்கி,
இது இன்னும் பிரிட்டிஷாரின் அடிமை இந்தியா தான் என்ற மன மாயையை அகற்ற விடாது.
காங்கிரஸ் திணிக்கும் இந்த அடிமை எண்ணம், மக்களை தேசத்தின் வளர்ச்சி பாதையில் இருந்து பின்னோக்கி இழுத்து,
'எங்களுக்கு உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள்'
என்று மீண்டும் உலக நாடுகளிடம் மக்களை கையேந்த செய்யும் மனோபாவத்தை வளர்க்க முயற்சிக்கும் குரூரமான சதி.
'காங்கிரஸ் இன்னும் தன்னை திருத்தி கொள்ளவே இல்லை.'
ராகுல் காந்தி,
இது உங்கள் குடும்ப ஆதிக்கத்தில் இருந்த அடிமை இந்தியா அல்ல.
இது மோடியின் இந்தியா.
வலிமையான இந்தியா.
யுத்தம் இன்றி பாகிஸ்தானை நடுத்தெருவில் நிறுத்திய தந்திரம் அறியவில்லையா?
அல்லது
சத்தம் இல்லாமல் சீனாவின் பொருளாதார சாம்ராஜ்யத்தை ஆட்டுவிக்கும் சூட்சுமத்தை நீங்கள் உணரவில்லையா?
இது புண்ணிய பூமி ராகுல்.
இன்னும் நூறு வருடங்கள் உங்கள் பாதத்தை இந்த மண்ணில் பதித்து சுற்றி வாருங்கள்.
அப்போதாவது தேசப்பற்று உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் ஆன்மா புனிதமடையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...