Wednesday, December 14, 2022

இரு அணிகளும் இதையே மாத்தி மாத்தி சொல்லி தான் ஓடுகாலிகளையும் துரோகிகளையும் பொறுப்பு கொடுத்து அங்கீகரித்தது.

 ஏன்பா ராஜ் சத்யன்,

சசிகலா தினகரன் அதிமுகவை கைப்பற்றியதும் அங்கே ஜால்ரா அடிச்சி, தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் சை எதிர்த்து ஆபாச விமர்சனங்களால் தாக்கி , பின் தினகரன் டீமுக்கு ஓடிப்போய் எடப்பாடியாரை எதிர்த்து, நாகரிகமற்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை பதிவு செய்த/ பேசிய மொட்டை பாலா, செய்தி வாசிப்பாளர் முன்னாள் நடிகை பிரசன்னா , போன்றவர்கள், எடப்பாடிதான் அதிமுக அதிகாரத்தில் ஓங்கி இருக்கிறார் என்ற நிலை மாறியதும் தினகரனை விட்டு ஓடிவிட்டனர். ஓரிடத்தில் விசுவாசமற்ற இந்த ஓடுகாலிகளை எடப்பாடியாரை சந்திக்க வைத்து IT Wing ல் துணை மாநில பொறுப்பு வாங்கி கொடுத்த.
எடப்பாடி தோல்வியடைந்ததும் மொட்டை பாலா திமுக ஒடிட்டான், அவனை திரும்ப அழைக்க மெனக்கெட்டு அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் போட்ட... பாவம்😅😅
இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியேற்பு விழாவில் தொகுப்பாளினியாக பிரசன்னாவும் திமுக ஓடிப்போயிட்டா.😅😅
ஆட்சி அதிகாரம் எங்கே இருக்கிறதோ அங்கே ஜால்ரா அடிக்கும் இவர்களைத்தான் மதித்து அதிமுகவை 'வளர்க்க 😜' பொறுப்பு தருகிறாய். அதுக நன்றி விசுவாசமில்லாம உன்னை மதிக்காம பசையுள்ள இடமாக பார்த்து ஓடிப்போய்டுதுங்க.
இரட்டை இலை வாழ வேண்டும் என்று தலைவரின் சின்னத்தின் பக்கம் நின்று உழைத்தவர்களை உதாசீனம்படுத்தினாய்.
கட்சி பலமுடன் இருக்க விசுவாசிகளை பக்கத்தில் வைக்க வேண்டும் தாவும் துரோகிகளை மேலே ஏற்றிவிட்டால் கட்சி எப்படி உருப்படும் ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...