Tuesday, December 13, 2022

இந்திய தடுப்பு ஊசியை முன் உதாரணமாக மோடிஜி அவங்க போட்டுக்கொண்டார்.

 கொரனா பரவி வந்த நேரத்துல பாரத பிரதமர் அவர்கள் அதனை,கட்டுபடுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வந்தாங்க. பல லட்சக்கணக்கான கோடிகளை,நிதி ஒதுக்கி தரமான தடுப்பு ஊசிகளை தயாரிக்க நேரடியாக கண்காணித்து ஊக்கப்படுத்தி வந்தாங்க. உலகளாவிய அளவில தடுப்பு தயாரிக்க முயற்சிகள் மற்றும் கடுமையான தட்டுப்பாடாக இருந்த நேரம்.எங்கே,தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளை விட்டால் மரணம் வந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.அதை வைத்து தமிழ்நாட்டுல திமுக கூட்டணி கட்சிகள் அரசியல் செய்தாங்க இந்திய தடுப்பு ஊசி நம்பகத்தன்மை உள்ளதா ?

என விசிக போன்ற கட்சிகள் பேசி வந்தாங்க. ஆனால் மோடிஜி எந்த விமர்சனங்களை,பற்றியும் கவலை படாமல் கோவிக்ஸின் கோவிஷீல்டு தடுப்பு ஊசிகளை ஹைதரபாத் மும்பை இன்னும் சில இடங்களில் தினமும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தயார் செய்ய ஏற்பாடு ஆகியது.தடுப்பு ஊசிகள் உற்பத்தி ஆகி விநியோகம் நடக்க ஆரம்பித்த போது திமுக ஆட்சியில வந்து விட்டது.இந்திய தடுப்பு ஊசியை முன் உதாரணமாக மோடிஜி அவங்க போட்டுக்கொண்டார்
ஒவ்வொரு,மாநிலத்திற்கும் உற்பத்தி கையில் வரவர லட்சக்கணக்கான ஊசிகளை விமானம் மூலமாக அனுப்பி வைத்தாங்க.
ஆனாலும் அதனை ஊழலற்ற முறையில் முன் பதிவு செய்து முறையாக போடாமல் அரசியல் கட்சி காரங்க தடுப்பு ஊசிகள் போடுமிடத்தில் வரிசை யை முந்தி பணம் வாங்கி கொண்டு,தாங்கள் அனுப்ப கூடிய ஆட்களுக்கு போட வேண்டும் என நிர்பந்த படுத்திய சம்பவங்கள் உண்டு.தனியார் ஆஸ்பத்திரிகள முதலில் கணிசமான அளவில வரவில்லை. தட்டுப்பாடாக இருக்கும் போது ஏன் சீனாவில அமெரிக்காவில இருந்து தடுப்பு ஊசிகள் இறக்குமதி செய்ய வில்லை. செங்கல்பட்டுல ஏன் தயாரிக்க வில்லை என விவாதிக்க ஆரம்பித்தாங்க.அந்த விவாதம் நடந்த போது தினத்தந்தி நெறியாளர் அசோகவர்த்தினி அவர்கள் மத்திய அரசு,தடுப்பு ஊசிகள் வழங்கு வதை பார்த்தால் தமிழ்நாட்டுல அனைவருக்கும் போட ஐந்து வருடங்கள் ஆகும் என கிண்டலாக கருத்து கூறினாங்க.
ஆனால் நடந்தது என்ன வென்றால் சரமாரியாக விமானங்கள் மூலமாக வந்த தடுப்பு ஊசிகளை போட்டு தீர்க்க முடியவில்லை. சில ஆயிரம் தடுப்பு ஊசிகள் வீணாகி விட்டது.இரண்டு மாதங்களில் கூவி கூவி ஆட்களை அழைத்த வண்ணம் ஊசிகளை போட வேண்டிய அளவுக்கு தடுப்பு ஊசிகள் இலவச சப்ளை ஆனது.தெரு,
தெருவாக அபார்ட்மெண்ட் சென்று போட்டாங்க. அந்த பிரச்சினை பேச வழியில்லாத வகையில் விரைந்து செயல்படுத்த பட்டது
அதே சமயத்தில மிகவும் அதிகமாக விலை உள்ள அமெரிக்க தடுப்பு ஊசிகள் இறக்குமதி செய்து பல லட்சம் கோடிகள் அந்நிய செலாவணி வீணடிக்க வில்லை.இந்திய தடுப்பு ஊசிகள் பல நட்பு இஸ்லாமிய நாடுகள் மற்ற நட்பு,நாடுகளுக்கு ஆப்கானிய தேசம் உட்பட இலவசமாக அனுப்பப்பட்டது .இப்ப உள்ள நிலைமையில் சீனாவில இன்னும் கொரனா தீவிரம் முடியவில்லை அவங்க தடுப்பு ஊசிகள் இந்திய தடுப்பு ஊசிகள் அளவுக்கு வேலை செய்ய வில்லை. அமெரிக்க தடுப்பு ஊசிகள் அதே,போல தான். மோடிஜி அரசு அதிகமாக இலவசம் கொடுக்காமல் பணத்த வீணடிக்காமல் பெட்ரோல் டீசல் மூலம் வந்த வருமானத்தை கொரனா நேரத்துல பல லட்சம் கோடிகள் செலவில இலவச உணவு,தானியங்கள்,தடுப்பு,ஊசிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தடுப்பு உபகரணங்கள் என முறையாக செலவிட்டு நிவாரண உதவிகள் பல அறிவித்தாங்க
அதனால தான் இப்ப உலகளாவிய பொருளாதார பிரச்சினை இந்திய அளவுல இல்லை. பல நாடுகள்ல பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை அதிகம் கடும் தட்டுப்பாடாக உள்ளது இந்தியாவில் ஊழலற்ற முறையில் சிலிண்டர்கள் உடனுக்குடன் கிடைக்கிறது.
கால்டாக்சி ஆட்டோக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் பெட்ரோல் டீசல் கிடைக்கிறது.இதனை மக்களுக்கு விவாத களம் மூலமாக தொலைகாட்சி சேனல்கள் எடுத்து கூற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...