Friday, December 16, 2022

எனக்கு தெரிந்த வரை வயதானவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை...

 பலரும் ஆண் குழந்தை பிறந்தால் வயதான காலத்தில் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறார்கள்...

ஆனால் , ஆணாக இருந்தாலும் பெண் ஆக இருந்தாலும் யாரும் நம்மை பார்க்க போவதில்லை என்பது தான் நிதர்சனம்...
பல வயதானவர்கள் படும் துன்பத்தை பார்த்தால் ,
பயமாக இருக்கிறது....
படுக்கையில் சிறுநீர் களித்ததற்கு மருமகள் அடிப்ப தாக ஒரு பாட்டி சொன்னார்...
90 வயது தாத்தா, என் காது அருகில் வந்து
"""90 வயசு வரைக்கும் லாம் வாழ கூடாது"" னு நேத்து சொன்னார்...
இன்னும் பல வயதானவர்கள் என்னிடம்
""'உயிர் போகுர மாத்திரை இருந்தா எழுதி கொடுங்கன்னு """கேற்றுக்காங்க....
குடும்ப சிக்கல், தனிமை,
உடல் பிரச்சினை அல்லது
பொருளாதாரம் என்று ஏதோ ஒன்று
வயதானவர்கள் மனதில் இடம் பிடித்து கொள்கிறது......
7 புள்ள பெத்த என் அப்பாவின் அம்மாவும்(வயது 80),
4 புள்ள பெத்த என் அம்மாவின் அம்மாவும் (வயது 72)தனியா தான் இருக்காங்க...
பல நாட்கள் தூக்கம் தொலைகிறது எனக்கு,
என்னிடம் வரும் வயதானவர்கள் கதையை கேட்டு...
மருத்துவம் பார்ப்பது சாபம் தான்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...