Tuesday, December 13, 2022

நீங்க ஏன் தேவையில்லாத அறிவுரை வழங்குறீங்க ?

 திமுகவினருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ஆட்சியை கலைக்கும்படி மட்டும் நடந்துக்கொள்ளாதீர்கள்....

ஏதாவது ஓன்னுகிடக்க ஒன்னா ஆகி ஆட்சியை கலைச்சுட்டாங்கன்னா மீண்டும் நீங்கள் ஆட்சியை பிடிப்பது நடக்காத காரியம் ...காரணம் மக்களிடம் திமுக ஆட்சியின் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது...
சினிமா துறை
ரியல் எஸ்டேட் துறை
மாநகராட்சி
பொதுபனித்துறை
மின்சாரத்துறை
போக்குவரத்துறை
காவல்துறை
இப்படி எங்கே திரும்பினாலும் உங்களின் அடவாடித்தனங்களும், அடக்குமுறைகளும்,அதிகார துஷ்பிரயோகங்களும் அதிகமாகி இந்த குறுகிய காலத்திலையே மக்களின் முகத்தில் அடித்தார் போல அடித்து மக்களின் வெறுப்பை மிக அதிகமாக பெற்று இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை..
அதற்கு ஏற்றார் போல "அமைச்சர்களால் தூங்க முடியாமல் தவிக்கிறேன்" என சொந்த மேடையிலையே முதல்வர் மனம் வருந்தி பேசும் அளவிற்கு திமுகவினர் பொதுமக்களை அவமான படுத்தும் விதமாக பேசியது எல்லாம் அவ்வளவு லேசில் மறக்ககூடியது இல்லை..
அதே நேரம் பொய்யான வாக்குறுதிகள்.கொடுத்து .இதுவரை ஒன்றைகூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவது அனைத்தும் ஒருபுறம் மக்களை கோபத்தின் உச்சியில் ஏற்றி உட்கார வைத்து இருக்கிறீர்கள் ...
ஆக இப்போது இருக்கும் சூழ்நிலையில் ...மத்திய அரசிடம் பணிந்து போக வேண்டும் என்றில்லை ...ஆனால் நல்ல விஷயங்களில் இணைந்து போகலாம் தமிழ் நாட்டுக்கு தேவையானதை சுமூகமாக கேட்டு பெறலாம்...
அதை விடுத்து இந்தி எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு, நீட் நீக்கு,என்று எல்லாம் பேசி மத்திய அரசுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்வது.கொள்ளிக்கட்டையை கொண்டு தலையை சொறிந்துக்கொள்வதற்கு சமம்......
காசு,குவாட்டர்,பிரியாணி கொடுத்தா ஓட்டு போடப்போறாங்க.
ஆட்டம் பாட்டம் கூத்து சீரியல்ன்னு மக்களை யோசிக்க விடாம பார்த்துக்குறாங்க.
அந்த அளவுக்கு எல்லாம் மக்களுக்கு உணர்வு இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...