Saturday, December 17, 2022

நல்லா புரிஞ்சுக்கோங்க !!!

  *அய்யா !!! வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமலேயே, நாமெல்லாம், அந்த வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமுங்க !!!*

*எது எதெல்லாம், யார் யாருக்கு, எவ்வளவு எவ்வளவோ இருந்தாலும், அய்யா, நல்லா புரிஞ்சுக்கோங்க !!! காலம் அனுமதித்தால் தானய்யா அவரது வாழ்க்கை தொடரும் !!!*
*எதிர்காலம் தீர்ந்து போவது என்பது என்ன பொருள்? அதாவது, நினைவுகள்தான் இறந்தகாலம் என்பது !!! அவை யாவும் இறந்துவிட்ட நிஜமற்ற நிகழ்வுகள் !!! ஆனால், நிகழ்காலமோ, ஒரு வினாடிக்கும் குறைவான மிக சிறிய காலம் !!!
*அப்படியானால் எதிர்காலம் தானா வாழ்க்கை என்பது? ஆம், இப்போது முதல் எப்போது என்று தெரியாத மரணம் வரை உள்ள ஊர்ஜிதமற்ற மிகச்சிறிய எதிர்காலம் தான் வாழ்க்கை என்பது !!!ஏனெனில், இளைஞனுக்கும் மரணம் உண்டு வாலிவனுக்கும் மரணம் உண்டு ஆரோக்கியம் உள்ளவனுக்கும் மரணம் உண்டு !!! பாடி பில்டருக்கும் மரணம் உண்டு !!! குறிப்பாக, எதிர்பாக்காதவனுக் கும் மரணம் உண்டு !!!
*எல்லோரும் ஒரு COUNT DOWN CLOCK ஐ எடுத்துக்கொண்டு தான் பூமிக்கு வருகிறார்கள் !!! யார் யாருக்கு எந்த எண்ணிலிருந்து COUNT DOWN ஆகிறது என்பதுதான் எவருக்கும் தெரிவதில்லை !!!*
*தன் உடலை காப்பதன் மூலம் மனிதன் தன் உயிரை காக்க முடியும் என்று எண்ணுகிறான் !!! இது தான் அவனது அறியாமைகளில் மிகவும் பெரியது !!!
*மனிதன், தன் உடலை காப்பதன் மூலம் தன் உயிரைக் காத்துக்கொள்ள முடியும் என எண்ணுகிறான் !!! கட்டுமஸ்தான வாலிப உடலை எவ்வளவுதான் பேணி காத்தாலும் போகின்ற உயிரை நிறுத்த முடியாது !!!*
*எவ்வளவு காலம் இந்த உயிர் (ஆத்மா) உடலில் வாழுமோ, அதுவே, இந்த உடலின் வாழ்க்கை. இதையே, ஆன்மா/ஆத்மா என ஞானிகள் போற்றுகின்றனர்.*
*இந்த ஆத்மாவை அறிகின்ற மனமானது மனிதனைத் தவிர எந்த விலங்கிடமும் இல்லை.*
*விலங்குகளுக்கு இல்லாத சிறப்பான மூன்று இயல்புகள் மனிதனுக்கு உள்ளன. அவையாவன*
*(1). "தான் ஒரு மனிதன்" என்று அறிதல்.(2). எது தர்மம் எது அதர்மம் என்று தெளிதல். (3). எது மெய், எது பொய் என்பதை உணர்தல்.*
*மெய் போலவே இருக்கும் பொய்களையும் + பொய் போல இருக்கும் மெய்களையும் ஆராய்ந்து, அறிந்து, காலத்தை வீனாக்காமல், அதர்மத்தை ஒதுக்கி, பொய்யைப் புறந்தள்ளி, மெய்யை உணர்ந்து, தர்மப்படி வாழ்கின்ற மனக்கட்டுபாட்டை உடையவனே மனிதன் !!!*
*சிந்திக்கவும் : மருத்துவம் தெரியாத காட்டு விலங்களுக்கு எந்த நோயும் இல்லை !!! . ஆனால், மருத்துவத்தில் சாதனைகள் படைத்த மனிதனுக்கு மட்டும் ஏன் பல்லாயிரம் வியாதிகள் ?*
*சிந்திக்கவும் : "புலி, சிங்கங்களின் தொல்லையை அனுபவிக்க முடியாமல், ஒரு மான் தற்கொலை செய்து கொண்டதாம் !!!" எப்போதாவது கேட்டதுண்டா இத்தகைய செய்தியை?*
*சிந்திக்கவும் : மனத்துயர், கவலை, தலைவலி, SUGAR, BLOOD PRESSURE, TENSION, ALLERGY, SUICIDE என ஏதுவுமே விலங்குகளுக்கு இருப்பதில்லையே !!! ஏன் மானிடா உனக்கு மட்டும் இத்தனை மோசமான நிலைமை?*
*சிந்திக்கவும் : நீ திடீரென விபத்துக்குள்ளானால், "பாடி" வீட்டுக்கு வருமுன்பே, உன் சொந்தங்களும் நட்புக்களும் உன் வீட்டுக்கே வந்து விடுவர் !!! உடனே, வெகு வேகமாக நீ எல்லோருடைய நினைவுகளில் இருந்தும் வெளியேறிக் கொண்டு தான் இருப்பாய் !!!*
*ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்தைக் தன்னுடன் கொண்டு வருகிறது !!! கொண்டுவந்த காலம் தீர்ந்தவுடன், அது எந்த இடமானாலும், பெட்ரோல் தீர்ந்துவிட்ட காரைப்போல, அந்த இடத்திலேயே உடலைப் போட்டுவிட்டு, ஆத்மா சென்றுவிடும் !!!*
*இந்த வினாடி வரை உனது எஞ்சிய எதிர்காலம் இன்னமும் தீரவில்லை இந்த ஞானம் உனக்கு விழிப்புணர்வை தர வேண்டுமே தவிர ஆணவத்தை தரக்கூடாது !!! அஜாக்கிரதையை தரக்கூடாது !!! மெக்கான போக்கை தரக்கூடாது !!!
*"எதிர்–காலம்" தீர்ந்துபோன உடல் உடனே மதிப்பை இழந்துவிடும் !!!*
*எனவே, உன்மனம் அழியுமுன்பே, அழியாத ஒன்றை (ஆன்மாவை) உணர்ந்துவிடு !!!*
*மனிதப்பிறவி உட்பட, நீ இதுவரை பெற்ற அத்தனைக்கும் நன்றி சொல் மானிடா !!! நன்றி என்று இறைவனுக்கு வாயால் சொன்னால் போதாது !!!*
*பிறரைத் துன்புறுத்தாமல் வாழ்வதன் மூலமாக ... உன் இறைவனுக்கு நீ நன்றி சொல்ல வேண்டும்.*
*பிறருக்கு உதவியாக வாழ்வதன் மூலமாக ... உன் இறைவனுக்கு நீ நன்றி சொல்ல வேண்டும்.*
*ஆம்.!!! மானிடா, நீ நல்லவனாக வாழ்வதன் மூலமாகத்தான் ... உன் இறைவனுக்கு நீ நன்றி சொல்ல வேண்டும்.*
*இதுவரை நீ பிறருக்கு உதவாமல் வாழ்ந்தது எல்லாம் போதும்.*
*இதுவரை நீ பிறரைத் துன்புறுத்தி வாழ்ந்தது எல்லாம் போதும்.*
*இதுவரை நீ கெட்டவனாக வாழ்ந்தது எல்லாம் போதும்.*
*நிறுத்திவிடு மானிடா ... SUDDEN BREAK போட்டு, உன் பொய்யான மற்றும் தவறான வாழ்க்கையை நிறுத்திவிடு !!!*
*உன் வண்டியிலே எவ்வளவு குறைவாக பெட்ரோல் உள்ளது என்பது உனக்கே தெரியாதபோது, நீ செல்ல வேண்டிய இடத்தை விட்டுவிட்டு, தேவையற்ற இடங்களுக்கெல்லாம் நீ பயணம் செய்வாயா ? மாட்டாய் அல்லவா ?*
*அதைப்போலவே, மானிடா உன்கையில் எவ்வளவு எதிர்காலம் உள்ளது என்று தெரியாதபோது, நீ ஏன் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து காலத்தை விரயமாக்குகின்றாய்?*
*இனியாவது "உடனே நற்கதியைத் தேடுவேன்" என்று சொல் மானிடா "உடனே நற்கதியைத் தேடுவேன்" என்று சொல் !!!*
*ஏழைகள்தான் வீண் செலவு செய்வதை அதிகமாக தவிர்க்க வேண்டும் உண்மைதானே? அதைப்போலவே, ஊர்ஜிதம் மற்ற மிகக்குறுகிய எதிர்காலம் உள்ள மனிதன் காலத்தை வீணாக்கக் கூடாதல்லவா? எனவே காலம் எனும் வாழ்க்கைச் சக்கரத்தை சரியான பாதையில் செலுத்து !!! மானிடா உனக்கு எந்த கவலை இருந்தாலும், அந்தக் கவலையை உடனே நிறுத்த வேண்டுமா? உடனே ஞானயோகப் பயிற்சி மூலம் கவலைகளை அகற்று !!! உன்னுள் நீயே ஆனந்தமாக வாழுகின்ற வழியைதேடு !*
*கோடிகள் கொடுத்தாலும் கிடைப்பதற்கரிய ஞானங்கள் அத்தனையும் வேதங்களில் கொட்டிக் கிடக்கின்றன !!! அவற்றை சேகரித்து ஞானயோகப் பயிற்சி கொடுக்கின்றேன்.
*தன்னுணர்வுத் தேடலில் உள்ள நண்பர்களே !!! 100 கோடி மாந்தர்களில் ஒருவனுக்கு தான் ஆத்ம ஞானம் !!! கவலையற்ற, வெறுப்பற்ற, கோபமற்ற நிலையை அடைவதே, ஆத்ம ஞானத்தை அடைந்ததற்கான அடையாளம் !!! அப்படிப்பட்ட ஒரு ஆத்ம ஞானி தனது பதிவுகளின் மூலம் உங்களை கவர்ந்து விட்டு ஆத்ம ஞானத்தை கொடுப்பதற்கு தொலைபேசி மூலம் உங்கள் வீட்டுக்கு வருகிறார் இதை காட்டிலும் பெரிய ஒரு சந்தர்ப்பம் எவருக்கும் எப்போதும் கிட்டாது !!! இதை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள் !!!
*உன் மனம் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மனதில் நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் உன் மனம் செல்லுகின்ற பாதை சரியான பாதையாகும். அப்போதுதான் உன் மனம் உனக்கு உதவுகிறான் என்று பொருள்.*
*பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கு தான் இதுபோன்ற தன்னுணர்வை தூண்டுகின்ற பதிவுகள் ஈர்க்கும் !!! அந்த ஈர்ப்பு சக்தி உன்னிடம் உள்ளதா? ஆம் !!! அந்த தேடல் உங்களிடம் உள்ளதால் தான் என்பதிவுகள் உங்களைக் கவர்ந்துள்ளன !!! பிடித்திருக்கின்றன. ஞானம் குருவும் தொலைபேசி மூலம் உங்கள் பாக்கெட் கே வரும் பொழுது சந்தர்ப்பத்தை வீணாக்கி கொண்டு பிறவி எடுக்க செல்லாதீர்கள் !!! மென்மேலும் கவலைகளில் மூழ்காதீர்கள் !!!
*நீங்கள் தான் அந்த பல்லாயிரத்தில் ஒருவர் என பெருமை கொள்ளுங்கள் !!!ஆனால், அந்த பொக்கிஷமான அந்த உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.*
*ஜீவன்முக்தனாக வாழுங்கள் !!! "கவலையற்ற ஆனந்த வாழ்க்கையைப்" பெற்றுப் பலன் அடையுங்கள் !!! மீண்டும் பிறவா வரம் பெற்று விடுங்கள் !!! பிரம்மத்தில் ஐக்கியமாக முன்கூட்டியே ஒரு நிரந்தர இடத்தை முன்பதிவு செய்யுங்கள் !!! அதுவரை கவலையற்ற வாழ்க்கையையும், பயமற்ற மரணத்தையும் பெறுங்கள் !!! அதுவே உனது பிறவிப் பயனாகும் !!!*
*அதற்காகவே, மனித உருவில் இந்த பூமிக்கு நீ பிறந்து வந்திருக்கிறாய் என்பதை மறவாதே !!!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...