Saturday, December 17, 2022

*#மாற்றம்_நம்மிடம்…*

 ***************************************************************************************

*அது தவறு, இது தவறு, அவன் தப்பு பண்றான், இவன் தப்பு பண்றான் என நாள் முழுவதும் குறை கூறி விட்டு நாமும் அதையே செய்து வருகின்றோம்..*
*யார் செய்வது தவறு, யார் மாற வேண்டும் என்பதே கேள்வி..*
*எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறி விட முடியாது.. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால் முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.*
*எந்த செயலிலும் நாம் முன் மாதிரியாக இருந்தால் தான் நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும்..*
*ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தக் குழந்தைக்கு பிரார்த்தனை செய்து கொண்டே, நிரம்பி வழியும் பேருந்துப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தான் மூன்று குழந்தைகளைப் பெற்ற தகப்பன்..*
*ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பரிதாபப்பட்டுக் கொண்டே 16 பள்ளிக் குழந்தைகளைத் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் ஆட்டோ ஓட்டுநர்.*
*போர்வெல்லை மூடாதவர்களைத் திட்டிக் கொண்டே செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டிச் சென்றார் வாகன ஓட்டுனர்..*
*லஞ்சம் வாங்கிக் கொண்டு தரமற்றப் பள்ளிப் பேருந்துக்கு சான்றிதழ் கொடுத்து விட்டு, ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்கக் கிளம்பி விட்டார் ஒரு அதிகாரி.*
*சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக் கொண்டே பாதையின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒரு சாமானியன்.*
*மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக் கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து வைரலாக்கினார் ஒரு நல்லவன்...*
*மக்கள் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் வரை இப்படித் தான் இருக்கும் என்று திட்டி விட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துப் பணியிட மாற்றம் வாங்குகிறான் ஒருவன்.*
*நாட்டின் பொருளாதாரம் சரிந்துப் போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் டாஸ்மாக்க்கு தண்டச் செலவு செய்கிறான் ஒரு குடிமகன்.*
*நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே, தொழிற்சாலைகளால் தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறான் ஒருவன்.*
*அடுத்தவர் முதுகைப் பார்த்து சிரிக்கும் யாரும் தன் முதுகை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை..*
*முன்னெச்சரிக்கை (என்ற வார்த்தை) இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சில சம்பவங்களைப் பார்க்கும் போது..*
*இதுவும் கடந்து போகும். இதைவிடப் பெரிய நிகழ்வு நடந்தால் நாம் அதை விமர்சனம் செய்யத் தயாராகி விடுவோம்..*
*தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கும் பொழுது போக்குக்கும் பஞ்சம் என்றும் இருக்காது.. மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடம் இருந்து தொடங்க வேண்டும்..*
*நாம் மாறினால் மொத்தமும் மாற வாய்ப்பு உருவாகும்..ஆம் முதலில் நாம் மாறுவோம். தானாகவே மக்கள் மாறுவார்கள்.. மாற்றம் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்.......*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...