Wednesday, December 14, 2022

துக்ளக் பத்திரிகையின் ஒன்றரைப் பக்க நாளேடு இன்று இருந்திருந்நால் கீழ்க்கண்ட உரையாடல் வெளியாகி இருக்குமோ?

 தந்தை: மகனே, நாளை உனக்கு முடிசூட்டு விழா.

மகன்: என்ன!!! முடிசூட்டு விழாவா?
தந்தை: ஆம். நாளை நீ அமைச்சர் ஆகிறாய்.
மகன்: முடிசூட்டுவது யார்?நீங்கள் தானே?
தந்தை : ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு .......ம் தேவையில்லை என்று சொன்னோமோ அவர் தான் முடிசூட்டுகிறார்.
மகன்: அவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று சொன்னோமே?
அப்போது இதுவும் அப்படித் தானா?
தந்தை: அது அப்போது,
இது இப்போது.
மகன்: பொது மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்.
தந்தை: அன்று சொன்னது பொது மக்களுக்கு.
இன்று செய்வது என் மக்களுக்கு.
மகன்: மாநில நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று சொன்னோமே?
தந்தை: அதைத் தானே இப்போதும் செய்யப்போகிறார்.
மகன் : மக்கள் நம்மை தமிழின துரோகிகள் என்று சொல்லமாட்டார்களா?
தந்தை: நாம் தமிழர்கள் என்று யார் சொன்னது?
நாம் "திராவிடர்கள்"
மகன்: சனாதனத்தை நுழைக்கிறார் என்று விமர்சித்தோமே?
தந்தை: சனாதனம் என்றால் முடிவில்லாதது என்று பொருள். வாரிசு அரசியலும் தி மு க வை பொரறுத்த வரை முடிவில்லாததே.
மகன்: இது தான் தமிழக அரசியலா?
தந்தை : இல்லை! இது தான் 'திராவிட மாடல்' அரசியல்.
(குறிப்பு : மேலே உள்ள கதா பாத்திரங்கள் கற்பனையே. யாரையாவது நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...