Thursday, February 23, 2023

நம்பி அருகே வைத்தவர்களால் வீழ்ந்தார்.

 ஜெயலலிதாவை ஆணாதிக்கம் கொண்டு நீங்கள் விமர்சிக்கலாம் ...ஜெயலலிதாவை ஒரு திரைப்பட நடிகையாக மருத்துவர் ராமதாஸ் போல நீங்கள் கேவலப்படுத்தலாம் ...ஜெயலலிதாவை விமர்சித்து சசியை நம்பியதற்காக நீங்கள் காரணம் சூட்டலாம்... ஆனால் ஒரு பெண் தனித்து வாழ்ந்து உச்சத்திலிருந்து மிகப்பெரிய மக்கள் ஆதரவு பெற்று தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதிக்க முடியும் என்பது கருத்தில் கொண்டு அந்த விமர்சனம் இருக்க வேண்டும் ..தந்தை சொத்துக்களை அழித்து விட்டு சென்று விட்டார் .தாயோ இரண்டாம் தாரமானார் ...இறைவன் கொடுத்த அழகு நடிக்க எத்தனைத்த அந்த முடிவு அதுதான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்தது... ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் புறம் தள்ள முயற்சித்தார் அதை மீறி வர வேண்டி இருந்தது... எம்ஜிஆர் இறந்தவுடன் புரோக்கர் r m வீரப்பன் தடுத்தார் அதை மீறி வர வேண்டி இருந்தது ...கருணாநிதிக்கு எம்ஜிஆர்யே போட்டியாளராக எடுத்துக் கொள்ளும் எண்ணமில்லை அவர் ஜெயலலிதாவை அப்படித்தான் நினைத்தார் ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயலலிதா கருணாநிதி என்கின்ற நிலை வருவதற்கு காரணமாக இருந்தது ..அரசு 2006 வரை நிகர பட்ஜெட் கொடுக்கும் தமிழகமாக இருந்தது ...மின்சார பிரச்சனையை தீர்ப்பதற்காக மிகப்பெரிய கடனை உருவாக்க வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு வந்தது ...இன்றைக்கு அது ஆறரை லட்சம் கோடி நிதி பற்றாக்குறை என்கின்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது... 50000 கோடி நஷ்டம் என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது ...ஜெயலலிதா இந்திரா காந்தியை நம்பினார் சோனியா காந்தி உடன் துணை நின்றார் ராஜீவ் காந்தி நட்பை கேட்டுப் பெற்றார் ....அனைவரும் அவரை கைவிட்டனர்.... வாழ்ந்து முடிந்த ஒருவரை விமர்சிப்பது என்பது மிக சுலபமான ஒரு விஷயம்... கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் spectator போல ..ஆனால் விளையாடுவதும் அடுத்தவனை வீழ்த்த வியூகம் அமைப்பதும் முடிவுகளை சரிவாக சொல்லுவதும் களத்தில் நடக்கும் ஒரு விஷயம் ....ஜெயலலிதா அரசியலில் ஈடுபட்ட பெண்களில் மிக தைரியமாக... எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் போட்டியிட்டு இறைவனடி சேர்ந்தவர்.... அவரை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை அவரை தூற்றுவதற்கு கொஞ்சம் தகுதி வேண்டும் .

All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...