Wednesday, February 22, 2023

*வாழ்க்கை மிகவும் புதிரானது..*

 நல்லவர்..

வல்லவர்..
மனித நேயமிக்கவர்..
எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..
பலரது பசியையும் ஆற்றியவர்..
இளகிய மனம் கொண்டவர்..
என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட,
அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..
மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..
அவருக்காக வாக்கு கேட்கவில்லை..
அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..
தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..
நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..
கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..
அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..
அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..
இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!
இன்று அவர் மரணத்திற்குப் பிறகு..
மைக் பிடித்து அழுவது..
உருகி உருகி பதிவு போடுவது..
ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..
என்று செய்வது எல்லாம் சரிதான்..
ஆனால்..
*அது எதுவும் அவருக்குத் தெரியாது..*
அதையெல்லாம் *அவர் பார்க்கவும் முடியாது..*
இதுதான் வாழ்க்கை..
இவ்வளவுதான் வாழ்க்கை..
*இனியாவது..*
*மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை*
*அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே கொண்டாடப் பழகுங்கள்..*
வாழ்க்கை மிகவும் புதிரானது....
🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...