Wednesday, February 8, 2023

பாக்யராஜ்.

 எம்.ஜி.ஆருடன் இவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் இவரை சினிமாவின் கலைவாரிசு என்ற பட்டத்தை வாங்கவைத்தது. அந்த பட்டத்தை கொடுத்தவரே எம்.ஜி.ஆர் அவர்கள்.

ஒரு சமயம் அவருடைய மகன் சாந்தனுவின் முதல் பிறந்த நாளன்று எம்.ஜி.ஆரை பார்த்து வாழ்த்து பெறுவதற்காக குடும்பத்தாருடன் சென்றிருந்தார் பாக்யராஜ்.
கீழே காத்திருந்த பாக்யராஜ் ஹாலில் மாட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை காட்டி இது யார் என்று கேட்டார்.
அவரது மூன்று வயது மகள் உடனே எம்.ஜி.ஆர் தாத்தா என்று கூறினாள். அதைக் கேட்ட எம்.ஜி.ஆரின் செக்ரட்டரி ஐய்யயோ இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆர் மாமா என்று தான் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிடிக்காது. மேலும் எம்.ஜி.ஆர் வரும்போது தாத்தானு கூப்பிடாம பாத்துக்கோங்கனு சொல்லிவிட்டு போய் விட்டார்.
எம்.ஜி.ஆர் வந்ததும் பாக்யராஜின்
மகள் சந்தோஷ மிகுதியால் எம்.ஜி.ஆர் தாத்தானு கத்தி சொன்னாள்.
அதை கேட்ட எம்.ஜி.ஆர் தன் இரு கைகளால் பாக்யராஜின் மகளை அரவணைத்து கொஞ்சினார்....
கூடவே அவரது கண்களும் கலங்கி விட்டது. இதை அருகில் இருந்த வேலையாட்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சாந்தனுக்காக செயின் போட நினைத்த எம்.ஜி.ஆர் மகளையும் பார்த்து பாக்யராஜின் மகளுக்கும் சேர்த்து இரண்டு செயின்களை போட்டார்.
இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பாக்யராஜ் அவர்கள் கண்கலங்க சொன்னது.
May be an image of 4 people and people standing
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...