Tuesday, February 21, 2023

நல்லதே நடக்கட்டும் ....

 நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டுமா? யாருக்கும் தெரியாமல் இதை மட்டும் செய்து விடுங்கள். அதிர்ஷ்டத்தை வழங்கும் அற்புதமான பரிகாரம்.நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள் , நம்பிக்கை இல்லை எனில் இந்த பதிவினை கடந்து சென்று வழக்கமான வழிகளை பிரார்த்தனைகள் செய்யுங்கள் !நம்பிக்கை தான் வாழ்க்கை ! அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் பதிவு செய்து அன்னை மகாலக்ஷ்மி துதிப்போம் ! நல்லதே நடக்கட்டும்

அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அதிர்ஷ்டம் நம்மை தேடி வரவே நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நாமே பல பேர் புலம்புவதை பார்த்திருக்கிறோம் எனக்கு ராசியில்லை, எனக்கென்றால் எதுவுமே நடக்காது என்று இது வெறும் புலம்பல் மட்டும் கிடையாது உண்மையும் கூட.
உதாரணமாக கடன் கூட ஒரு சிலர் போய் கேட்டால் உடனே மறுக்காமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் இன்னும் சில பேர் கேட்டால், எப்பொழுதுமே பணம் கொடுப்பவர்களிடம் கூட அந்த நேரத்தில் பணம் இருக்காது. இப்படியானவர்களை தான் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று சொல்வார்கள். இப்படி ஆனவர் கூட தங்களை அதிர்ஷ்டசாலிகளாக மாற்றிக் கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்படி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அதிர்ஷ்டம் நம்மை தேடி வர நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடலாம். அதற்கு நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. ஒரே ஒரு பூட்டை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பூட்டு சில்வர், பித்தளை என உங்களிடம் இருக்கும் பணத்திற்கு தகுந்தாற் போல் வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த பூட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம். ஒன்று பூட்டை பேரம் பேசி வாங்க கூடாது, மற்றொன்று பூட்டை திறந்து பார்க்கக் கூடாது. பணத்தை கொடுத்து பூட்டை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுங்கள். இரவு தூங்கும் பொழுது அதை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இந்த பூட்டு அப்படியே இருக்க வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து உங்களின் அன்றாட பணிகள், பூஜைகள் அனைத்தையும் முடித்த பிறகு, உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோயிலுக்கு இந்த பூட்டை திறக்காமல் அப்படியே கொண்டு செல்லுங்கள். கோவிலுக்குள் சென்றதும் இந்த பூட்டை கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் வர வேண்டும் என்றும், உங்களின் தேவைகள் நிறைவேற வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு இந்த பூட்டை அங்கேயே வைத்து விட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள்.
நீங்கள் ஆலயத்தில் வைத்து விடும் இந்த பூட்டை யாரோ ஒருவர் எப்பொழுது திறக்கிறாரோ, அப்போது உங்களுக்கான அதிர்ஷ்ட கதவு திறக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், கிழமை, நேரம் என எதையும் பார்க்க வேண்டியது இல்லை.
எளிமையான இந்த பூட்டு பரிகாரத்தை செய்து அதிர்ஷ்டம் நம்மை தேடி வர செய்வதுடன், செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பூட்டு பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து, வாழ்வின் அனைத்து விதமான அதிர்ஷ்டத்தையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழுங்கள்
அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்
வருவாயே லெட்சுமியே வருவாயே
உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே
எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்
சிந்தனைக்குச் செவிசாய்த்து சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்!
வந்தமர்ந்து உறவாடி வரங்கள் பல தருவதற்கே
சந்தான லட்சுமியே தான் வருவாய் இதுசமயம்
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொரு போகமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்!
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ!
இன்றோடு துயர்விலக இனிய தன லட்சுமியே
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்
எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே!
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லட்சுமியே
மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்
கற்றுநான் புகழடைந்து காசினியில் எந்நாளும்
வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கின்றேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்
நெஞ்சிற் கவலையெலாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே
அஞ்சாது வரம்கொடுக்கும் அழகுமகா லட்சுமியே!
வஞ்சமிலா தெனக்கருள வருவாய் இதுசமயம்
ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே!
வாழும் வழிகாட்டிடவே வாவீர லட்சுமியே!
மாலையிட்டுப் போற்றுகின்றேன் வருவாய் இதுசமயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...