Tuesday, February 21, 2023

நிலம் காணா விதையா முளைக்கும்.

 ●●●●●●●●●●●●●●●●●●●●

எண்ணங்களை விதை விருட்சம் தரும் வேர் ஊன்றி
திறன் உன்னிடம் திரவமாய் உள்ளது அதை தீ போல் பற்றவை
வரம் தவம் இவையெல்லாம் உனக்கு வேண்டும்
நீயே நம்பிக்கை எனும் கடவுளாய்
தொடக்கம் இல்லாது
முடிவும் உண்டோ எதிலும்
வருத்தம் கொள்ளாது கொண்டாடு வாழ்க்கையை
பின்னோக்கி செல்லாதே மண்ணோக்கி போகும் வரை
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
ஒரு பயணம் இதில் உன்னை அடையாளம்
காண்பி
நித்தமும் சூழலும் பூமியும் சோர்ந்து போவதில்லை
இயல்பு மாறா தன் பணியை இயல்பாய் செய்கிறது
நிலம் காணா விதையா
முளைக்கும் நீ சென்ற பாதையெல்லாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...