Wednesday, February 8, 2023

நல்லது நினைப்பவர்களுக்கு மட்டுமே நல்லது நிச்சயமாக நடக்கும்.

 **நிலை வாசலில் உருளியில் இந்த ஒரு பூவை மட்டும் போட்டு வையுங்கள் போதும். வீட்டிற்குள் செல்வம் தானாக வந்ததுவிடும். நிம்மதி ஒரு நாளும் கெட்டுப்போகாது.

நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு வருவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருப்பவர்களின் மன நிம்மதியும் ரொம்ப ரொம்ப முக்கியம். பணம் காசு இருக்குது ஆனா வீட்டில் மன நிம்மதியே இல்லை என்றால் வரக்கூடிய பணம் காசை வைத்து நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நிம்மதியோடு சேர்ந்த செல்வ வளத்தை பெறக்கூடிய ஒரு சுலபமான பரிகார முறையை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நிறைய பேர் வீட்டில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூக்களை நிரப்பி வைத்திருப்பார்கள். இதை உருளி என்று சொல்லுவோம். இதை வெறும் அழகிற்காக மட்டும் தான் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால், நிச்சயமாக கிடையாது. பஞ்சபூதங்களில் குளிர்ச்சியை தரக்கூடிய சக்தி கொண்ட பொருள்தான் நீர்‌. அந்த நீரில் வாசனை மிகுந்த பூக்களைப் போடும்போது அந்த ஊரிளி இருக்கக்கூடிய இடத்தை சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் உருவாகும்.
ஆக உருளி வைத்திருக்கக் கூடிய இடத்தில் ஏதோ ஒரு பாசிட்டிவ் எனர்ஜி, ஒரு மன நிம்மதி நிச்சயமாக இருக்கும். இந்த மன நிம்மதி குளிர்ச்சி ஒரு வீட்டிற்கு மிக மிகத் தேவையான ஒன்று. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்களுடைய கண்திருஷ்டியை தவிர்க்கக் கூடிய சக்தியும் இந்த உருளியில் வைத்திருக்கக்கூடிய தண்ணீருக்கும் பூக்களுக்கு உண்டு.
இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த உருளியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அதன் மேலே ஒரே ஒரு தாமரைப் பூவைப் போட்டு உங்களுடைய நிலை வாசல் படியில் வைத்து விடுங்கள். தண்ணீரில் தாமரைப் பூ இருப்பதால் மூன்று நாட்கள் ஆனாலும் அந்த பூ வாடாது. வாடின பின்பு தாமரைப்பூவை மாற்றினால் போதும். தினமும் உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மட்டும் மாற்றி வைத்து விடுங்கள்.
வீட்டு நிலை வாசலில் உருளியில் தாமரைப்பூ போட்டு வைத்தால் நான்கு திசையிலிருந்தும் நல்லது மட்டுமே உங்கள் வீட்டிற்குள் வரும். வீட்டில் சண்டை சச்சரவு வராது. வீட்டில் இருப்பவர்களுடைய மன நிம்மதி எந்த சூழ்நிலையிலும் கெட்டுப்போகாது.
உங்களை பிடிக்காதவர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் கூட அந்த நெகட்டிவ் எனர்ஜி வீட்டில் பிரச்சினைகளை உண்டாகாது. நிறைய நன்மைகளை தரக்கூடிய இந்த ஒரு பூவை வாங்குவதற்கு செலவும் அதிகமாகாது. தாமரைப்பூ கிடைக்காதபட்சத்தில் தாமரைப்பூக்கு பதிலாக வாசனை நிறைந்த பன்னீர் ரோஜா பூ, மல்லி பூ, போன்ற மற்ற பூக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் தவறு எதுவும் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...