Wednesday, February 8, 2023

தர்மயுத்தம் என்ன ஆச்சுன்னு கேட்கிற அதிமேதாவிகளுக்கு,

 விடிந்தால் மன்னார்குடி குடும்பம் படைசூழ, ஆளுயரமாலையுடன் அமைச்சர்கள் காத்திருக்க, வட்டம், மாவட்டம், ஐஏஸ், ஐபிஸ் எல்லாம் அண்ணா நூற்றாண்டுவிழா மண்டபத்தில் நாளை பதவியேற்பு விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகளை கவனிக்க பொரோட்டோகால் முறையில் முக்கிய அழைப்பாளர்களுக்கு இருக்கைகளை ஒதுக்கும் பணியினை முடக்கி விட,

அல்லிராணியோ போயஸ்தோட்டத்தில் ஆனந்தத்தில் திளைத்து இருக்க, கண்ணாடி முன்பு நின்று V.K.சசிகலா எனும் நான்... பலமுறை உச்சரித்து ஒத்திகை பார்த்து குதுகலிக்க... நாளை எங்க சின்னம்மா முதலமைச்சர் என சில்லறைகளும், அல்லக்கைகளும் ஆனந்தப்பட்டு அண்ணாந்து வாய்பிளந்து போயஸ்கார்டன் பால்கனியை காண தவமிருக்க, தமிழ்நாட்ல இருக்கும் முக்கிய டிவிசேனல்கள் செய்தியை முந்தி தர வாசலில் வரிசை கட்டி நிற்க...
அம்மா இருந்த இடத்தில் அந்த கொள்ளைக்காரியை நினைத்து பார்க்ககூட முடியாமல் உண்மை தொண்டன் வெம்பி நிற்க, தமிழ்நாட்டின் தலையெழுத்தை எண்ணி அனைத்து மக்களும் கண்ணீர் வடிக்க...
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் O. பன்னீர்செல்வம் தியானம் என அனைத்து சேனல்களும் செய்தியை அள்ளித்தெளிக்க, பூகம்பமும், சுனாமியும் ஒன்றாக சேர்ந்து போயஸ்கார்டனை சுழற்றி அடித்தது... 75நாட்கள் அம்மாவை அப்போலோவில் வைத்து இருந்தபோது டிவிக்கும்,பத்திரிகைக்கும் பேட்டி தர ஓடிவராத கால்கள், நம் முதல்வர் கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டானே, என்ற ஆத்திரத்திலும், அவசரத்திலும் கட்டியபுடவையோடு மேக்கப் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்த பொழுது அங்கு ஜெயித்ததுடா
கண்களில் கோபம் கொப்பளிக்க உதடு துடிதுடிக்க என்ன சொல்கிறோம் என்பதை உணராமல் அவனை பார்த்து சிரித்தான், இவனைபார்த்து முறைத்தான் என அழாமல் அழுது விட்டு சென்றாரே... அங்கு ஜெயித்ததுடா தர்மயுத்தம்...
ஒருநாள்...ஒருமணிநேரம்....ஒரேயொரு வினாடி... V.K.சசிகலா எனும் நான் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் செய்தாரே அங்கு ஜெயித்ததுடா #தர்மயுத்தம்
மன்னார்குடி கும்பலின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அதிமுகவில் உள்ள ஒன்றைரைகோடி பன்னீர்செல்வங்கள் இனிநடத்தும் போரே குருஷேத்ர போர் அந்த போரை கடந்த இதே நாளில் துவங்கிவைத்த அம்மாவின் விசுவாசமிக்க மாணவனுக்கு எங்களின் ராயல்சல்யூட்...
No photo description available.
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...