Monday, April 4, 2016

குணத்தை மையமாக கொண்டு அமைந்தல் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒருநாள் ஏதோ வேலையாக வெளியே நடந்து சென்றார்.
அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்காரரை அழைத்து,
"ஐயா... இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல.
இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும்" என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து,
"ஐயா.. நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..!
எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.
சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.
அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.
செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.
அப்போது நல்ல மழை.
பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று,
"ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச் செல்ல முடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா?" என்று கேட்டனர்.
அந்த வீட்டுக்காரர் கோபத்துடன் சொன்னார்,
"ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க”.
இதிலிருந்து நாம் இரண்டு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
1. உங்களுக்கு கிடைக்கும் மரியாதை உங்களுக்காகவா இல்லை உங்கள் பணத்துக்காகவா என்பதை உணர வேண்டும்.
பணத்தை வைத்து தான் மரியாதை என்றால், அது வெகு நாட்கள் நீடிக்காது...
அடுத்தவர் தரும் மரியாதை உங்கள் பணத்தை மையமாக கொண்டு அமையாமல், குணத்தை மையமாக கொண்டு அமைந்தல் வேண்டும்.
2. உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரை மட்டும் தான் மனுசனுக்கு மரியாதை.
உயிர் இல்லாத போது எல்லோரும் வெறும் பிணம் மட்டுமே.
வாழ்வது ஒரு முறை தான், அதனை அர்த்தமுடையதாகவும், முழுமையாகவும் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்.
வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...