Tuesday, March 26, 2019

4 சட்டசபை தொகுதிக்கும் கடைசி கட்டத்தில் தேர்தல்?

தமிழகத்தில், திருப்பரங் குன்றம் உட்பட, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலுக்கான, கடைசிக் கட்ட ஓட்டுப்பதிவு நாளன்று நடத்தப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை,தொகுதி,கடைசி கட்டத்தில்,தேர்தல்

லோக்சபா தேர்தலோடு சேர்த்து, தமிழகத்தில், ஏற்கனவே காலியாக இருந்த, 21 சட்டசபை தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தை காட்டி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், இடைத் தேர்தல் நடத்த முடியாதென, தலைமை தேர்தல் ஆணையம் கைவிரித்தது.
 முறையீடு:

இதை ஏற்க மறுத்த, தி.மு.க., தரப்பு, 'இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்த வேண்டும்' என வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததோடு, உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டது.

இந்த சூழ்நிலையில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, தாமதமின்றி களமிறங்கிய, தி.மு.க., அந்த உத்தரவு தொடர்பான ஆவணங்களின் நகல்களை, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் ஆணையர்களை சந்தித்து, சமர்ப்பித்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்திலும், ஒட்டப்பிடாரத்திலும், தேர்தல் நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலை, தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றமும், கடுமையாகவே, தேர்தல் ஆணையத்தை கண்டித்தது. இந்த வழக்கின் விசாரணை, நாளை மீண்டும் துவங்கவுள்ளது. எனவே, மூன்று தொகுதிகளுடன், சமீபத்தில் காலியான சூலுார் தொகுதிக்கும் சேர்த்து, தேர்தல் நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 
அதிருப்தி:

ஏற்கனவே, நீதிமன்றம், அரசியல் கட்சிகள் என, பல்வேறு தரப்பிலும், அதிருப்தியை தேர்தல் ஆணையம் சம்பாதித்து உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுடன் சேர்த்து, இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால், தேர்தல் அட்டவணை மாறிவிடும். 

எனவே, லோக்சபா கடைசிகட்ட தேர்தல் நடக்கும், மே 19ம் தேதி, இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தலாமா என, தேர்தல் ஆணைய அதிகாரிகள், தீவிரமாக யோசித்து வருவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...