Sunday, March 24, 2019

" ஜி.டி.நாயுடு "

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில்
ஜி.டி.நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான
சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும்,
மூன்றாவது பரிசும் கிடைத்தன.
பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து
அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார்.
ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது.
இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு
பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.
அதற்கு அவர் கூரிய காரணம்:
‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி
இந்திய ஆங்கிலேய அரசுக்கு
ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.
மேலும்,
தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான்
அவற்றை தன் பெயரில்
பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும்
இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
நாயுடுவின் கண்டுபிடிப்புகள்
பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு
வேறொரு காரணம்
அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி.
அன்றைய சூழலில் நாட்டிலேயே
அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும்
அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.
எனவே,
மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன்.
இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
மேலும்
தமிழக தலைவர்கள் முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கண்டுபிடிப்புக்களை உடைத்து நொறுக்கினார்.
தமிழகத்தின் நலன் பன்னெடுங்காலமாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு
இவரை விட வேறு சாட்சி தேவையில்லை
1938 ஆம் ஆண்டு
பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.
தாய்நாட்டின் இளைஞர்கள்
தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள்
படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார்.
தொழிற்கல்வி மட்டுமே
இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.
#அதியசமனிதர் என்று அழைக்கப்பட்ட மாமனிதர்
பிறந்தநாள் மார்ச் 23 .
அம் மாமேதையை நினைவு கூறுவோம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...