Tuesday, March 26, 2019

கனிமொழி வெற்றிக்காக கோயில்களை சுற்றும் ராஜாத்தி.

துாத்துக்குடியில் போட்டியிடும் மகள் கனிமொழி வெற்றி பெற வேண்டி தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி திருச்செந்துார் முருகன், வனதிருப்பதி பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்தார்.தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தாயார் ராஜாத்தியுடன் துாத்துக்குடியில் வீடு பிடித்து தங்கியுள்ளார். கனிமொழி பிரசாரத்திற்கு சென்றவுடன் ராஜாத்தி கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.நேற்று திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு வந்து அவர், கனிமொழி வெற்றி பெற வேண்டி மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து வனதிருப்பதி கோயிலுக்கும் சென்றார்.நிருபர்களிடம், ''கனிமொழிக்குக்கு வெற்றி தர சுவாமியை வேண்டினேன்'' என்றார்.
Advertisement
தூத்துக்குடி, கனிமொழி, ராஜாத்தி, திருச்செந்தூர் முருகன், கோயில்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...