Saturday, March 30, 2019

ராஜ கண்ணப்பனுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு.

அ.தி.மு.க., தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், அக்கட்சியிலிருந்து விலகினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

ராஜ கண்ணப்பனுக்கு, யாதவ சமுதாயத்தினரிடம் செல்வாக்கு உள்ளதால், அந்த சமுதாய ஓட்டுகளை மொத்தமாக, தி.மு.க., கூட்டணிக்கு திருப்பும் பொறுப்பை, ஸ்டாலின் அவரிடம் வழங்கி உள்ளார். இதனால், உற்சாகமான ராஜ கண்ணப்பன், தி.மு.க., கூட்டணியை ஆதரித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு, பிரசாரத்தை துவக்கி உள்ளார். 

ராஜ கண்ணப்பனை சமாளிக்க, அ.தி.மு.க., நிர்வாகிகள், யாதவ சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளை, வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிய, 'பெருந்தலைவர் மக்கள் கட்சி' தலைவர், என்.ஆர்.தனபாலன், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, நாடார் சமுதாய ஓட்டுகளை ஈர்க்க, அவரும், அனைத்து தொகுதிகளிலும், சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 ராஜ கண்ணப்பனுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...