Thursday, July 25, 2019

** திருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவி..... புல்லரிக்கவைத்த சிறுமியின் பேச்சு.

"பொறுக்கி தேசம் என்று சொல்லிவிட்டு ஏன் இங்கே இருக்கிறாய்?"
என்று திருமுருகன் காந்தியை மேடையில் தெறிக்கவிட்ட 5 ம் வகுப்பு மாணவியின் பேச்சு அனைவருக்கும் புல்லரிக்க வைத்தது....
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் விழா நிகழ்ச்சி ஒன்றினை, அங்கிருந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வழக்கம் போல் இல்லாமல், இந்த முறை பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு, இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டன. அதில்,
*"இந்தியாவுக்கு எதிரி யார்?" மற்றும்
"இந்தியா யாருக்கு எதிரி?"*
என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.
அதில் தேவக்கோட்டையைச் சேர்ந்த, சாதனா என்ற 5 - ம் வகுப்பு பயிலும் சிறுமி பேசிய பேச்சு, ராணுவ வீரர்களே எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டும் விதத்தில் அமைந்தது. அவர் பேசியது பின்வருமாறு....
"நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியர்கள் அனைவருக்கும், இந்த சாதனாவின் வணக்கம்.
இன்று, "இந்தியா யாருக்கு எதிரி?" என்ற தலைப்பில் தமிழகத்தில் மக்களை குழப்பி கொண்டிருக்கும் சில அர்பன் மாவோயிஸ்ட்களை பற்றிப் பேசப் போகிறேன்."
என்று ஆரம்பித்தார்...
"அதில் முதலில், திருமுருகன் காந்தி என்பவன் குறித்து இங்கு பேசுகிறேன் கேளுங்கள்...இங்குள்ள இளைஞர்களில் சிலர், அவன் பேசிய பேச்சுக்களில் மயங்கி, அவன் ஒரு அறிவில் சிறந்தவன் என்று நம்பியிருக்கலாம்.... அது தவறு என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றை இங்கே கூறுகிறேன்....
இந்தியா முழுவதும் ரேஷன் அரசி பொருட்களை இன்னும் 6 மாதத்திற்குள்மோடியின் அரசாங்கம் முழுவதும் நிறுத்திவிடும் என்று கூறினான். அதை கேட்ட இளைஞர்கள் பலரும், இந்திய அரசிற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
பலர் திருமுருகன் காந்தி ஐ. நா சபையில் பேசிய புகைப் படங்களைப் பகிர்ந்தனர். ஆனால் திருமுருகன் காந்தி சொல்லி இன்றோடு 4 வருடம் முடிந்துவிட்டது. இன்று வரை, சிறப்பாக ரேஷன் பொருள்கள் திட்டம் தொடர்கிறது. இவனை போன்றவர்களுக்கு, மக்கள் மனதில் நஞ்சை விதைத்து, இந்தியத் திரு நாட்டிற்கு எதிராக ஒரு இனத்தைத் தயார் செய்து, அதன்மூலம் இந்தியாவை துண்டாட வேண்டும் என்பதே குறிக்கோள்.... இந்தியாவை "பொறுக்கி தேசம்" என்று சொல்லிவிட்டு, இந்தியாவிலேயே தங்கி, இந்திய சோற்றை திங்கும் மானம்கெட்ட ஜென்மங்களுக்கு என்று, இந்திய சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து, உடனடியாக அவர்களை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிராக எவன் பேசினாலும் அவன் இந்திய நாட்டில் இருக்கத் தகுதி அற்றவன்.
இப்போது திருமுருகன் எனும் பெயர் கொண்ட அந்த நபரை, மீண்டும் இந்தியாவைப் "பொருக்கி தேசம்" என்று சொல்லச் சொல்லுங்கள்.... முதலில் விழும் அடி, என்னைப் போன்ற பாரத தேசத்தில் இந்தியராக உள்ள குடும்பத்தில் பிறந்த அனைவராலும் விழும்..." என்று பேசினார்.
"இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களுக்கு, நான்தான் முதல் எதிரி... நான் திருமுருகன் காந்தி போன்றவர்களை கேட்கிறேன்
1) இந்தியா பொறுக்கி தேசம் என்றால் இங்கு ஏன் இருக்கிறாய்?
2) இப்போது உனக்குத் தைரியம் இருந்தால், மேடை போட்டு, இந்தியாவை தமிழகத்தில் விமர்சனம் செய்ய முடியுமா? எங்களைப் போன்றோர் முன்னால் அப்படிப் பேச உனக்குத் துணிவு இருக்கிறதா சொல் பார்ப்போம்??? என்ற கேள்வியை எழுப்பி உரையை முடித்தார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த ஒட்டு மொத்த முன்னாள் ராணுவ வீரர்களும், எழுந்து வந்து, சிறுமிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதில் பேசிய, காஷ்மீரில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் சுந்தர் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு நாட்டு பற்றைச் சொல்லிக் கொடுத்தால், இந்த சாதனா போன்று பல சாதனாக்கள் உருவாவர் என்றார். இந்த சிறு வயதில் அக்குழந்தையின் மனதிலிருக்கும் தேசப்பற்றை நினைத்து பெருமைப்படுவதாகத் தெரிவித்தார். 5 ம் வகுப்பு பள்ளி, சிறுமி திருமுருகன் காந்தியை வெளுத்துவாங்கி இருப்பது தமிழக அளவில் தற்போது வைரலாகி வருகிறது.
பாரத் மாதா கீ ஜெய்... 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...