Wednesday, July 24, 2019

சமுத்திர கனியின் கனிவான பார்வைக்கு...

1) டிவிஎஸ் அய்யங்கார், சிம்சன் சிவசைலம் ஐயர் இவர்கள் கூட கோயில் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியாது!
2) BJP யின் H ராஜா, காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், கம்யூனிஸ்டு 
T K ரங்கராஜன் இவர்களும் - அவர்களே விரும்பினாலும் - எந்தக் கோயில் கருவறையிலும் நுழைந்து விட முடியாது!
3) ராஜா சர் முத்தையா செட்டியார் வம்சம், வள்ளல் அழகப்ப செட்டியார் வம்சம், வள்ளல் பச்சையப்ப முதலியார் வம்சம் இப்படி எவராயினும் காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், இன்னும் பல மாரியம்மன் கோயில்களில் - அவைகளைக் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்ய அவர்கள் கோடிக் கணக்கில் நிதி கொடுத்தாலும்...
4) அந்த பிராமணரல்லாத தனவந்தர்கள் எவரும் தாங்கள் கட்டி உதவிய காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் கருவறையில் நுழைந்து காளியை, மாரியைத் தொட்டுப் பூஜை செய்யமுடியாது!
5) அங்கே 'பார்ப்பனக்' குருக்கள் இல்லை - 'கடா மீசை' பூசாரி இருப்பார்! அந்த பிராமணரல்லாத பூசாரியை மீறி இந்த பிராமணரல்லாத கோடீஸ்வரர்கள் உள்ளே போக முடியாது - அது அவர்களே கட்டிய கோயிலாயினும்!
6) 'பார்ப்பனர்கள்' சிறுதெய்வ வழிபாடு செய்வதில்லை என்பது ஈரோட்டுச் சந்தையில் வாங்கி வந்து பெரியார் திடலில் விற்கப்படும் பச்சைப் பொய்!
7) பிராமணர்களிலேயே பல குடும்பங்களுக்கு 'பெரியாண்டவர்'- 'வெக்காளியம்மன்'- 'முனீஸ்வரன்'-
'பத்ரகாளியம்மன்'.. இப்படிக் குல தெய்வங்கள் உண்டு.
8) எல்லைவீரன், முனீஸ்வரன் போன்றவை கிராமத்தின் 'காவல் தெய்வங்கள்' என எல்லாராலும் வணங்கப்படுபவை.
9)காவல் தெய்வம் என்பது கிராமத்தின், சிற்றூரின் வெளியில்தான் பிரதிஷ்டை செய்யப்படும். எப்படி SECURITY என்பவர் ஒரு நிறுவனத்தின் வாயிலில் நிற்பாரோ அது போல!
10) ஆரம்பித்து 100 வருடத்துக்குப் பக்கம் ஆகப் போகிறது - இப்போதுதான் 'இந்தியக் கம்யூனிஸ்ட்' கட்சிக்கு ஒரு தலித் பொதுச் செயலாளர் ஆக முடிகிறது!
உங்களுடைய சிற்றறிவுக்கு இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளும் சக்தி இருக்குமானால், அது நீங்கள் பேசும் வசனத்துக்கு விசில் அடிக்கும் 'டுமிலன்'களுக்கும் புரிய வைத்து, அவர்களது மிகச் சிறிய அறிவை சற்றே வளருங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...