Wednesday, July 31, 2019

இந்திய பாராளுமன்றம் என்பது பிரிட்டிஷ்காரர்களின் கட்டிடக்கலை நமக்குக் கொடுத்த கொடையா..?

இந்த கீழ்கண்ட படத்தில் இருப்பது 11 ஆம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தில் மொரீனா என்னும் மலைமேல் இருக்கும் சௌசந்த் யோகினி என்னும் கோவிலின் படம்.
எட்வின் லூடியன் என்கிற பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட் 1910 - 1912 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைப் பார்வையிட்டு பின்னர் இந்திய பாராளுமன்றத்தை வடிவமைத்தார். ஆனால்.. எங்குமே தான் இந்திய கோவிலால் ஈர்க்கப்பட்டே இந்த பாராளுமன்றத்தைக் கட்டியதாக குறிப்பிடாமல்.. முழு பெருமையையும் தானே அபகரித்துக் கொண்டார். அது மட்டுமல்ல.. சுதந்திரத்திற்குப் பிறகு.. நம் இந்திய அரசாங்கம்.. அதிகாரப்பூர்வமாக இந்தியப் பாராளுமன்றம் லூடியன் என்னும் பிரிட்டிஷ்காரரின் மனதில் உதித்த டிஸைன் என்று அறிவித்தது. (ஒருவேளை அவன் எட்வினா மௌண்ட்பேட்டனின் உறவினனாக இருந்திருக்கலாம்).
இந்த கோவில் அப்போது கணிதத்தைப் பற்றியும் ஜோதிடத்தைப் பற்றியும் சூரியனின் நகர்விற்கு ஏற்ப கல்வியை அளிக்கும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்த கோவிலின் வடிவமைப்பானது.. எந்த நில அதிர்வையும் தாங்கக் கூடியதாகவும், அதனுடைய வட்ட வடிவமான கட்டமைப்பு இதுவரை எந்த சேதத்தையும் பல நூற்றாண்டுகளாகச் சந்தித்தது இல்லை என்றும் தெரிகிறது.
இந்த கோவில் கச்சஹபக்ஹட அரசர் தேவபாலா என்பவரால் 1055 - 1075 இல் கட்டப்பட்டது. தற்போது இங்கு எந்த பூஜையும் நடப்பதில்லை. 😭😭

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...