Tuesday, October 1, 2019

*திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!*

*1. வேங்கட மலை:*
*‘வேம்’* என்றால் பாவம், *‘கட’* என்றால் *‘நாசமடைதல்’*. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
*‘வேங்கட மலை’* என்று பெயர். *இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.*
*2. சேஷ மலை:*
பெருமாளின் அவதாரத்திற்காக *ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.*
*3. வேதமலை:*
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது *‘வேத மலை’* எனப்பட்டது.
*4. கருட மலை:*
இங்கு சுவாமியை வணங்க வந்த *கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’* எனப் பெயர் பெற்றது.
*5. விருஷப மலை:*
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது *‘விருஷப மலை’* எனப் பெயர் பெற்றது.
*6. அஞ்சன மலை:*
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க *ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’* எனப்படுகிறது.
*7. ஆனந்த மலை:*
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது *‘ஆனந்த மலை’* என்று பெயர் பெற்றது.
திருப்பதி மலைகளில் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்.
*திருப்பதி திருமலையில்,*
*1.த்ருவ ஸ்ரீநிவாசர்,*
*2. போக ஸ்ரீநிவாசர்,*
*3. கொலுவு ஸ்ரீநிவாசர்,*
*4. உக்ர ஸ்ரீ நிவாசர்,*
*5. மலையப்பர்.*
என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை *பஞ்சபேரர்கள் என்று* அழைக்கின்றனர்.
*1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி 
இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை *ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.*
*2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி 
இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். *கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ர கலசாபிஷேகம்* நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.
*3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி 
கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் *அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார்.* இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர *வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.*
*4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி 
இவருக்கு *வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார்.* ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி *ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.*
*5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி 
இவருக்கு *மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர்* எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் *மலையப்பர்.*
சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் *கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை* எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. *திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு,,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...