*அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!*
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!
*முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!*
ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-
*நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!*
*வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!*
*குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!*
அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,
“அன்பு என்றால் இது தான்"
*ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!*
எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!
*நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!*
*ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!*
*ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!*
*அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!*
-மகிழ்ச்சி💐💐💐
No comments:
Post a Comment