சீன அதிபரை வசதியாக டில்லியில் சந்திக்காமல் வேலைமெனக்கெட்டு அவரையும் இழுத்துக்கொண்டு தானும் மகாபலிபுரம் வருகிறார் பிரதமர். ஊரே பளபள என்று மாறிவருகிறது.
அவருக்கு இந்த மக்கள் ஓட்டுபோடவில்லை. அவர் கட்சியை மட்டுமல்ல அவரோடு கூட்டு சேர்ந்த பாவத்திற்கு அந்த கூட்டணியையே ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அவர் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, அதன் வரலாற்று சிறப்பை எதையும் மறக்கவில்லை மறைக்கவில்லை.
தமிழனே மறந்த ராஜேந்திர சோழன் திருவுருவ படத்தை மும்பை கடற்படை தளத்தில் திறக்க வைக்கிறார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று ஐநாவில் உரைத்து போலி தமிழ் ஆர்வலர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறார். இப்போது சீன தேசத்துடன் பல்லவர் கொண்டிருந்த வணிக தொடர்புகளை நினைவு கூறும் வண்ணம் மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் சந்திப்பு நடத்துகிறார்.
இந்த நேரத்தில் மகாபலிபுரத்தை உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. இதன் தொன்மை, பல்லவர் பெருமை, கடற்கரை கோவில்கள், சிற்பங்கள் எல்லாம் உலகின் பலரின் கண்களில் படும். இதனால் சுற்றுலா பெருகும், தமிழகத்துக்கு வருமானம் கூடும்.
அறியாமையில் மூழ்கிய தமிழகம் திருந்துமா? இல்லை வழக்கம்போல கோ பேக் மோடி சொல்லிக்கொண்டு என் கடன் கருப்பு பலூன் விடுவதே என்று பறக்கவிட்டால் பறப்பது பலூனாக இருக்காது நம் தமிழகத்தின் மானமாக இருக்கும்.
சுயநலம் சூழ்ந்த சுற்றங்களிடம் சிக்கி கொண்டிருக்கும் தமிழக குடும்ப அரசியலுக்கு நேர் மாறாக தேசமே முதல் என்று மார்தட்டிக்கொண்டு நேர்மையாக நிற்கும் நரேந்திர மோடியின் அருமையை உணர இன்னும் எத்தனை வரங்களை வீணாக்கப்போகிறோமோ..
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதநாட்டின் தலைமகனே தங்களை வரவேற்று மகிழ்கிறோம்...
ஜெய் மோடி சர்க்கார்....
ஜெய் மோடி சர்க்கார்....

No comments:
Post a Comment