Sunday, March 22, 2020

தெய்வம் மனுஷ்ய ரூபேண ...

அண்ணாதுரை என்பவர் அப்போது தமிழக முதல்வராகி பின்னர் கேன்சரால் இறந்து போனார்
காலன் வந்து கூட்டி போனான்
தமிழகமெங்கும் தொண்டர்கள் இறுதி யாத்திரையில்
கலந்து கொள்ள தூண்டப்பட்டனர்
தென் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கிடைத்த ரயில்களில் எல்லாம் ஏறினர்
உள்ளே நிற்க கூட இடமில்லை ரயில் கூரை மீது ஏறினார்கள்
அதிகாரிகள் தடுத்தும் கேட்பாரில்லை
அரியலூர் தாண்டும்போது ரயிலை நிறுத்திவிட்டார் அதன் டிரைவர்
சிறிது நேரத்தில் பாலத்தின் மேற்கூரை வரும் அதனால் அனைவருக்கும் ஆபத்து என்று அவர்களை எச்சரித்த அந்த டிரைவரை அந்த வெறிபிடித்த கூட்டம் தாக்கியது
வேறு வழி இல்லை தன் உயிர் போய்விடும் என்ற நிலையில் அந்த ரயில் இயக்கப்பட்டது
மேலே அமர்ந்து இருப்பவர்கள் அனைவரும் குடிபோதையில்
இனி அவர்களிடம் பேசிப் பயனில்லை என்று நினைத்தவர் தன் கண் முன்னே அந்தக் காட்சியை காண விரும்பாமல் அடர்ந்த கரும் புகையை வெளியிட்டார்
என்ன நடக்கிறது என்று தெரியாமல் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அப்போது இந்த நிகழ்வு அண்ணாதுரையின் சாவை விட பெரும் பரபரப்பாக பேசப்பட்டது
வெறிகொண்ட கூட்டத்தின் முன் யாரால்தான் என்ன செய்ய முடியும்
விசாரணை எல்லாம் நடத்தப்பட்டது அந்த டிரைவரும் தனது மனசாட்சியின் உந்துதலால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்
சரி இப்போது அதற்கென்ன
ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் செய்வதும் செய் என்றால் மறுப்பதும் தானே மனித இயல்பு
ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று ஒரு மனிதர் பத்தே நிமிடம் தான் பேசினார்
யாரும் வெளியே வரவேண்டாம் என்று
அதிசயம் நிகழ்ந்தது துப்பாக்கி முனையில் அல்ல
அவர் மேல் கொண்ட நம்பிக்கையால்
திரும்பி போ என கறுப்பு கொடி காட்டியவர்களும் வீட்டில் பதுங்கி கொண்டனர்
130 கோடி மக்களும் தங்களை தாங்களே சிறையில் அடைத்தது கொண்டனர்
உலகமே திரும்பி பார்க்கிறது
இந்தியாவுடன் தமிழகமும் கரையேறி விட்டது
ஒரு சரித்திரம் எழுதப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...