Tuesday, March 31, 2020

தற்சார்பு_வாழ்க்கை என்பது_யாதெனில்???

ஆரோக்கியவாழ்விற்கு இன்றியமையா வழிமுறைகள்...

உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட....
1. முதலில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி செல்லுங்கள் அல்லது உங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லுங்கள்....
2. வாழ்வதற்கும் தன்னிறைவு விவசாயம் செய்வதற்கும் போதுமான அளவு நிலங்களை வாங்குங்கள்....
3. சொந்தநிலத்தில் குறைந்தது 10 மரங்களையாவது நடுங்கள்..
4. விதைகளை எங்கும் வாங்காதிர்கள் நன்கு வளர்ந்த மரங்களின் விதைகளை சேகரித்து விதைத்து வளருங்கள்.....
5. எளிய வாழ்கைக்கு போதுமான அளவு வீடுகளை கட்டி கொள்ளுங்கள்.....
6. கிணறுகளை வெட்டுங்கள், (முடிந்தவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்காதீர்கள்) இல்லையென்றல் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு சுழற்ச்சி முறையுடன் அமையுங்கள்....
7. வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையான மின்சாரத்தை பெற சூரியஒளி அமைப்பை பயன்படுத்துங்கள்.....
8. நிலத்தில் அன்றாட வாழ்கைக்கு தேவையான காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை, கறிவேப்பிலை வளருங்கள்.....
9. விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள்.
10. பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்....
11. உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்.....
12. இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களை உங்கள் ஊரிலே தேடி தர்சார்புமுறை அமைப்புகளையும், குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்....
13. அந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பரிமாரி கொள்ளுங்கள்....
14. மற்றும் கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்.....
15. போதும் என்ற மனம் கொள்ளுங்கள், இயற்கையோடு இன்புற்று வாழுங்கள்....
மேற்கொள்காட்டியவைகளை முதலில் நிச்சயம் செய்ய முயற்சிப்பேன் என தினமும் எண்ணம் கொள்ளுங்கள் உங்கள் எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்....
பாரம்பரியம் செழிக்க உதவுங்கள், அடுத்தவர்களுக்கும் கற்பியுங்கள்...வளமோடுவாழ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...