Sunday, March 22, 2020

மக்ரோனி குருமா செய்வது எப்படி?

மக்ரோனி குருமா செய்வது எப்படி?
மக்ரோனி குருமா


















தேவையான பொருட்கள்  :

மக்ரோனி - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தனியா - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
தேங்காய் துருவல் - 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

கொத்த மல்லி புதினா - சிறிதளவு

மக்ரோனி குருமா

செய்முறை :

வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டி கொள்ளவும்

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.

.தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும்.

இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.

சூப்பரான மக்ரோனி குருமா ரெடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...