Saturday, March 28, 2020

உலகுக்கு கொரோனாவைரஸை பரப்பியவன் ஷி ஜின்பிங்... இந்தியாவுக்கு அதை செய்பவன் கேஜ்ரிவால்!

உத்தரபிரதேசத்திலிருந்து டில்லியில் பணிபுரிந்தவர்களின் மின்வசதியை கட் செய்து, தண்ணீரை நிறுத்தி, அவர்களிடம், “டில்லி - உத்தரபிரதேச எல்லையில் யோகி அனுப்பிய பஸ் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களை அங்கே இறக்கி விடுகிறோம்” என்று பொய் சொல்லி, அவர்களை டில்லியில் எல்லையில் கொண்டு போய் இறக்கி விட்டு... கேஜ்ரி ஆட்கள் சொன்னது போல உத்தரபிரதேச பஸ் எதையும் காணோம்.
“யார் நம்மை ஏமாற்றியது - கேஜ்ரிவாலா அல்லது யோகியா?” என்று கேட்க கூட திராணி இல்லாமல் - கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கால நடையாக கிளம்பினர் அந்த மக்கள்.
மத்திய உள்துறை அமைச்சகமும், உபி அரசும் அவர்களுக்கு உணவு, தங்க இடம், பஸ் ஏற்பாடு செய்தன.
கேஜ்ரிவால் இப்படி இறக்கி விட்டது கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர்!!! அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் இறப்பதால் அந்த கொடியவனுக்கு எந்த இழப்பும் இல்லை. காங்கிரஸ் - ஆம் ஆத்மி - கம்யூனிஸ்ட் - ஊடக வியாபாரிகள் நடத்தும் இந்த கொலைகார நாடகம் இப்போது சர்வதேச ஊடகங்களுக்கு தீனி போடுகிறது, “ஷேம் ஷேம் இந்தியா” என்று.
காங்கிரஸ் - ஆம் ஆத்மி - கம்யூனிஸ்ட் - ஊடக - முற்போக்கு கயவர்கள், “மோதி ஜி திட்டமிடல் ஏதுமில்லாமல் அவசரப்பட்டு ஊரடங்கு போட்டதால் இந்த நிலை. யோகி தன் மக்களை சரிவர பார்த்து கொள்ளாதது காரணம்” என்று காரணம் சொல்கிறார்கள்.
“இது வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதித்துள்ளது யோகி அரசு. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மற்றவர்களும் சோதிக்கப்படுவர்.” என்கிறது செய்தி...
‘தன் மக்கள்’ என்று நினைக்கும் அரசு அவர்களுக்கு ஆவன செய்கிறது. ‘எவன் செத்தால் எனக்கென்ன. எனக்கு வேண்டியது பாஜகவை குறை சொல்லி கிடைக்கும் அரசியல் ஆதாயம்’ என்கின்றன ஆம் ஆத்மி, காங்...
இதற்கான தண்டனையை கேஜ்ரிவால் அனுபவிக்காமல் போக மாட்டான்.
குறிப்பு: வேறெந்த மாநிலத்திலிருந்தும் மக்கள் இடம்பெயரவில்லை. டில்லி மட்டுமே இப்படி கொடுமையான செயலை செய்துள்ளது - அவர்களுக்கு கொரோனாவைரஸ் தாக்கி செத்தாலும் பரவாயில்லை என்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...