21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எவை இயங்கும், இயங்காது என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இயங்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், கேபிள் டி.வி, இன்டர்நெட், தொலைதொடர்பு, காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை இயங்கும்.
உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆன்லைனில் பெறலாம்
காய்கறிகள், நியாயவிலை கடைகள், இறைச்சிகடைகள், பால்,
காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள்
பெட்ரோல் நிலையங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.
சமையல் எரிவாயு நிறுவனங்கள் இவைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்.
இயங்காதவை எவை
வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பூஜைகள் மட்டும் நடக்கும்.
அனைத்து கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள் மூடப்படும்.
விமானம், ரயில், சாலை போக்குவரத்து நிறுத்தம்.
சமூகம், அரசியல், கேளிக்கை, விளையாட்டு, கலாச்சாரம் மதவிழாக்களுக்கு தடை.
இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்ள 20 பேருக்கு மட்டுமே அனுமதி.

No comments:
Post a Comment