Thursday, December 30, 2021

சென்னை தார் ரோடுகளில் நீரோடும் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பிப்பு.

 சென்னையில் திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


தமிழகத்தில் நாளை (டிச.,31) முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று (டிச.,30) மதியத்தில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தி.நகர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் ஓடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


latest tamil news



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...