Saturday, December 25, 2021

வாழும் கடவுள் ஐயா....வாழ்த்துக்கள் அய்யா...மானிட புனிதரே.

 கலைந்த தலை

செருப்பில்லாத கால்கள்.
அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம்.
யார் இந்த ஹரி.
மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர்.
சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய சாதனையாளர்களுக்கான "துருவா விருது' வழங்கும் விழாவில் விருது பெறுவதற்காக உட்கார்ந்திருந்தார் அவர்.
தாய்,தந்தையை இழந்த நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட இவர் 12 வயதில் தஞ்சம் அடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி மயானமாகும்.
பசிக்காக நேர்மையான எந்த வேலையும் செய்யத் தயராக இருந்த ஹரிக்கு அங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான உதவியாளர்களின் உதவியாளாக இருக்கும் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தது என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது.
மயானம் இவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது, அதில் முக்கியமானது எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான்.
இதன் காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மயான உதவியாளராக மாறி கிட்டத்தட்ட நாற்பது வருட காலமாக இந்த வேலையை செய்த போதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார்.
ஏழை மாணவ, மாணவியரை படிக்க வைப்பது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கட்டில் வாங்கிக் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, பார்வையற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்குவது என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். கையில் கொஞ்சம் காசு இருந்துவிட்டால் தகுதியான ஆளை தேடிப் பிடித்து அவர்களுக்கு உதவி செய்ய இவர் கிளம்பி விடுவார்.
இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரம் சடலங்களை எரித்தும், புதைத்தும் உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சடலங்களுக்கு இவரே சுற்றமும் நட்புமாக இருந்து சடங்குகளை செய்துள்ளார்.
இந்த விஷயங்களை எல்லாம் கேள்வி பட்டதன் அடிப்படையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. சுதேசி நிர்வாக ஆசிரியர் பத்மினி ரவிச்சந்திரன் ,முன்னாள் அமைச்சர் ஹண்டே ,முன்னாள் போலீஸ் கமிஷனர் நந்தபாலன் ஆகியோர் அவருக்கு சேர்ந்து விருது வழங்கியபோது எழுந்த கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
எவ்வளவோ பேரின் சடலங்களை எரித்தும், புதைத்தும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் ஹரியின் கடைசி விருப்பம் என்ன தெரியுமா ?அவர் இறந்த பிறகு அவரது உடலை எரிக்கவோ ,புதைக்கவோ கூடாது .மாறாக அவர் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்க வேண்டும் .அதனால் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கு உபயோகமாக இருக்கும் என்பது தான் அவரது கடைசி விருப்பம் ஆகும்.
May be an image of 5 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...