Sunday, December 26, 2021

நம்பிக்கை இழக்காதே!!!

 விழுந்தால் அழாதே . . .

எழுந்திரு !
தோற்றால் புலம்பாதே . . .
போராடு !
கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு !
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !
நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !
நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !
மொத்தத்தில் நீ பலமாவாய் . . .
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
உன்னால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் .
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...