Friday, May 20, 2022

முதுமை + தனிமை= *கொடுமை*

 *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*
*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*
*இங்குதான் என் மகள் படிப்பாள்...*
*இங்குதான் விளையாடுவாள்...*
*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*
*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*
*என்ன சமைப்பது?...*
*என்ன சாப்பிடுவது?...*
*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*
*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*
*தனிமை... வெறுமை...*
*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*
*பயணம் ஒரு கொடுமை...*
*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*
*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*
*ஓலாவும், ஊபரும்...*
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
*பீக் hour சார்ஜ்*
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...
*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*
இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*
*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*
*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*
இவை வேண்டாமென ஒதுங்கி...
*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*
*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்...
அந்த நேரம் அவர்கள்...
*ஏதோ ஒரு மாலில்...*
*ஏதோ ஒரு ஓட்டலில்...*
*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*
*பிசியாக இருப்பார்கள்...*
*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*
*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*
*நாலு நாள் கழித்து...*
*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*
நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...
*அவர்கள் டைமிற்கு...*
*நம் தூக்க நேரம்...*
*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*
*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*
*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*
*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*
*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*
*அவன் வெளியே விளையாடறான்...*
*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*
*அவன் டியூஷன் போயிருக்கான்...*
*யோகா போயிருக்கான்...*
*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*
*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*
*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*
*ஓடி விடும்...*
*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*
*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*
*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*
*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*
*இந்த அரசியல்களும்...*
*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*
*என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...*
*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*
*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*
*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*
( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)
*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*
🤔🤭🤫😰😥😓😦😪
*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...