Saturday, May 21, 2022

தகவல்களை அறிந்து கொள்வோம்....

 1.கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்..

2.வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்..
3.சிரிப்பு இல்லாத வாழ்க்கை, சிறகு இல்லாத பறவைக்கு சமம்.. பறவைக்கு அழகு சிறகு.. உனக்கு அழகு சிரிப்பு..!!
4.சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.. செயல்படும் போது உறுதியோடு செயல்படுங்கள்.. விட்டுக்கொடுக்கும் போது மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்..
5.உன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நீ நினைப்பதற்கு முன்பு, நீ அனைவரையும் மதித்து வாழக் கற்றுக் கொள்...
6.சிரிப்பதற்கு பற்களை இறைவன் தந்தாலும், சிரிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்..
7.சிரித்துக் கொண்டே இந்நாளைத் தொடங்குங்கள்.. சிரிக்காத நாட்கள் அனைத்தும் விரையமான நாட்களே..
8.வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்.. வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுக் கொடுங்கள்..
9.எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல.. சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை..
10.பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல... ஓரு நாள் குறையும் ...ஒரு நாள் கூடும் ...ஓருநாள் காணாமலே போய்விடும் ...
அதனால கவலைகளை விட்டுட்டு சந்தோசமா தூங்குங்க..
11. உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு..!
12.சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு..!
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...