Friday, May 20, 2022

லண்டன் மாநாட்டில் தி.மு.க.,பங்கேற்பை ரத்து செய்த ராகுல்.

 ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். இதில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் ரத்து செய்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.

'பிரிட்ஜ் இந்தியா' என்ற அமைப்பு சார்பில், லண்டனில் 'இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ். மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news



இந்த மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க., சார்பில் அக்கட்சி எம்.பி., திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த விவகாரத்துக்குப் பின், திருச்சி சிவா பெயரை, ராகுல் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மாநாட்டை தவிர, கேம்பிரிட்ஜ் பல்கலையில், வரும் 23ல், 'இந்தியா - 75' என்ற தலைப்பில் ராகுல் பேசுகிறார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...