Tuesday, May 17, 2022

அசிங்கத்தில் காலை வைக்காதீங்க!

 திரைப்படங்களில் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை, எம்.ஜி.ஆர்., அறவே தவிர்த்தார்; ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைகளிலும் அவர் சிக்கியதே இல்லை. தமிழகத்தில் தற்போது பிரபல இளம் நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர், விளம்பர படங்களில் நடிக்கின்றனர்.



பணம் சம்பாதிப்பதற்காக, அவற்றில் நடிக்கும் அவர்கள், தாங்கள் விளம்பரம் செய்யும் பொருளானது, மக்களுக்கு பயனுள்ளதா, நல்லதா என்று பார்ப்பதில்லை; எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதில் தான் குறியாக உள்ளனர். 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஏற்பட்ட இழப்பால், அவ்வப்போது சிலர் தற்கொலை செய்து வரும் நிலையிலும், பல குடும்பங்கள் அழிந்த நிலையிலும், அந்த சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர். 'ரம்மி விளையாடுங்கள், சம்பாதியுங்கள்' என, அவற்றில் பேசி வருகின்றனர்.



சினிமா நடிகர் என்ற முத்திரையை பயன்படுத்தி, பாதகச் செயலில் ஈடுபடும் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும்; அத்துடன், இத்தகைய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதும் தடை செய்யப்பட வேண்டும். மக்களின் வாழ்வை கெடுக்கும் விளம்பரங்களின் விபரீதம் தெரியாமல், பணத்திற்காக அதில் நடிப்பது, விபரம் தெரிந்தும், அசிங்கத்தில் காலை வைப்பது போன்றது. இதை நடிகர்கள் புரிந்து கொண்டால் சரி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...