Friday, May 20, 2022

இனிவரும்காலங்களில் நோயில்லாமல்வாழ..!!

 ◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!!

வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள்
◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்..
◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த
ஒரு அகத்திமரம்..
◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...
◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!
◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .
தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.
இவை மட்டுமே போதும்...
எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.
■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...