Wednesday, May 18, 2022

ஆடம்பரம்’’ ஒரு அழிவுப்பாதை..

 அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றி விட்டது.

ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட அதனால் அழிந்து போனவர்கள் தான் அதிகம்.
ஓவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தத் தடையுமில்லை.
அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் போது தான் அழிவுப் பாதை ஆரம்பம் ஆகின்றது.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்த நாள் விழா.
ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள்தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் பொட்டலத்தைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.
அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்என்ன?” எனக் கேட்டார்.
அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான்.
மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம் பழமும், ஓடும் போல இருங்கள்!” என்றான்.
அவையினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்கஆசனத்தை விட்டு எழுந்துதெனாலிராமனைத் தழுவி,
ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.
பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள்.
இனி என் பிறந்தநாள் அன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், வயோதியர்களுக்கு மூன்று வேலை அன்னதானம் செய்யுங்கள்.
வீர விளையாட்டை நடத்துங்கள்..வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும்,பொருளும் கொடுங்கள். அவசியம் இல்லாமல் பணத்தை ஆடம்பரமாகச்செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.*
ஆடம்பர வாழ்க்கை: தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒரு நாள் நிம்மதி இழப்பார்கள்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின் முன் மாயும் மூடுபனியைப் போல மறைந்து விடும்.
நமது தகுதிக்கு உட்பட்டு, சாதாரணமாக வாழ்ந்து விட்டால் மன நிம்மதியுடன் வாழலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...