Tuesday, May 17, 2022

நாம் அதை வாழ்ந்து பார்ப்போம்...!

 நேற்று என்பது போய் விட்டது. நாளை இனி தான் வர வேண்டும்.

நமக்கு இருப்பது இன்று மட்டும் தான். நாம் அதை வாழ்ந்து பார்ப்போம்...!
நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ் எல்லாம் முக்கியம் தான்.
இவற்றையெல்லாம் விட வாழ்வது மிக மிக முக்கியம்.
ஏதோ ஒன்றை துரத்தி கொண்டு, அதன் பின்னாலேயே காலமெல்லாம் ஓடுவார்கள் சிலா். அதை அடைந்தும் விடுவார்கள்.
ஆனால், வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி பாா்த்தால், அவா்கள் இழந்ததும், அனுபவிக்க தவறியதும் ஏராளமானதாக இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம் வேண்டும் தான்.
அதை அடைய வேண்டியதும் அவசியம் தான்.
ஆனால், அதற்காக வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
அதன் ஓட்டத்தோடு இணைந்து மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து விட வேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...