Tuesday, May 17, 2022

இவரைப்போல் நமது மாவட்டத்தில் பார்ப்பது அரிது.......பிற மாவட்டங்களில் உள்ளது ........மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

 அது ஒரு இடைநில்லா பேரூந்து...

நாகர்கோவில் திருநெல்வேலி தடத்தில் இயங்கும் TN 74N 2061 பேரூந்து..
நேற்று 15.5.22 காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட
பேரூந்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தது..
பின் பக்கத்திலிருந்து கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வந்தார்.
அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து முடித்து பார்த்தால் டிரைவருக்கு இடதுபுறம் கண்டக்டர் இருக்கையில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அமர்ந்திருந்தார்..
அவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்த போது பேரூந்து தோவாளை தாண்டி சென்று கொண்டிருந்தது..
தனது இருக்கையில் அமர்ந்திருந்த அந்த முதிர்ந்த பெண்மணியை எதுவும் சொல்லாத கண்டக்டர் முன்பக்கம் படிக்கட்டு தரையில் அமர்ந்து பயணம் செய்தார்..
தோவாளையிலிருந்து திருநெல்வேலி வரை படிக்கட்டு தரையில் அமர்ந்து பயணித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது..
திருநெல்வேலியில் இறங்கி அவரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டி விட்டு போட்டோ எடுக்க கேட்ட போது சிரித்தபடியே மறுத்து விட்டார்..
பெயர் ஷிபு, கொல்லங்கோடு சேர்ந்தவர் ராணித்தோட்டம் III டிப்போவில் பணியாற்றுவதாக சொன்னார்...
பயணிகளிடம் எந்நேரமும் எரிந்து விழுபவர்கள், அநாகரிகமாக பேசும் கண்டக்டர்கள் மத்தியில் ஒரு சேவை மனம் கொண்டவர்...
May be an image of 3 people, people sitting, footwear and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...