Friday, May 20, 2022

இறைவனால் உங்களை காப்பாற்ற முடியும்.

 வாழ்க்கைமிகவும் அழகானது.ஆனால் சில நேரங்களில் அதை நாம்மிகவும் கடினமானதாக்கிக் கொள்கிறோம்.

சரணடைதல் எனும் மிகச் சிறிய செயல்
மிகப் பெரிய பிரச்சனைகளில் இருந்தும் உங்களைக் காப்பாற்றக் கூடியது.
வாழ்வில் கவலைகளை மறந்து இறைவனிடம் சரணடையக் கற்றுக்கொள்ளுங்கள்.
எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் இறைவனால் உங்களை காப்பாற்ற முடியும்.
அவர் நடத்தும் நாடகத்தில் நாம் ஒரு கதாபாத்திரமே என்பதை உணர்ந்து கொண்டு எதைப் பற்றியும் அதிகமாக கவலைப்படாதீர்கள்.
எதற்கும் அதிகமாக சிந்திக்காதீர்கள்.
இறைவனை நம்பி ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது
ஒவ்வொரு செயலையும் செய்யும் பொழுது
அனைத்திலும் இறை ஆற்றலை உங்களால் உணர முடியும்.
முழுமையாக இறைவனிடம் சரணடைய தொடங்கும்பொழுது உங்களுக்குள்ளும் இறைசக்தியை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.
அந்த நொடி முதல் இறைவனைத் தேடி நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை.
இறைவனே உங்களைத் தேடி வருவார்.
இறைவனை முழுமையாக நம்பி சரணடைபவர்களுக்கு அனைத்தும் இன்பமயமே.
இறை அருளால் தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான மகிழ்வான வாழ்க்கையை வாழ்வதற்கு
வாழ்த்துக்கள்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...