Wednesday, May 18, 2022

சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டும் .

 திருச்சியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி - சென்னை சாலையில் சமயபுரம் என்பது கோயில் மட்டுமே உள்ள தனி ஊர் அல்ல.

சமயபுரத்தில் நுழைந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்குத்தான் செல்லுகின்றது என்பதும் அல்ல.
சமயபுரம் என்னும் ஊரில் நிறைய திருமண மண்டபங்கள் ,தங்கும் விடுதிகள் வீடுகள் என பொது மக்களின் வசிப்பிடங்களும் நிறைய உண்டு. மேலும் சமயபுரம் ஊரில் நுழைந்து மாகாளிக்குடி மற்றும் பிற ஊர்களுக்கும் செல்லும் வசதி உள்ளது.
அதுமட்டுமல்ல .சமயபுரத்தில் நடை பெறும் ,திருமணம் ,துக்க காரியங்களுக்கு ,இந்துக்கள் அல்லாதவர்கள் கூட அப்பகுதியில் வந்து செல்லும் வாய்ப்பும் உண்டு .
வசூல் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது நியாயமில்லை.சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டும் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமயபுரம் உள்ளே நுழையும் அனைத்து வகை வாகனங்களுக்கும் நுழைவு வரி வாங்கப்படுவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல என்பது பொதுவான கருத்து.
ஊருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு வரி வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...