Thursday, December 1, 2022

*திருவோணம்* - *திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் திவ்யதேசம்*

 மூலவர்:

புண்டரீகாக்ஷன்
(செந்தாமரை கண்ணன்)
தாயார்:
பங்கயற்செல்வி
மங்களாசாசனம்:
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்
இத்தலம் திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதால் *ஆதிவெள்ளறை*!
வெண்மையான பாறையினாலான மலை என்ற பொருளில் வெள்ளறை என போற்றப்பட்டு *திருவெள்ளறை* என்று ஆனது!
இக்கோயிலில் தை முதல் ஆனி வரை *உத்தராயண வாசல்* வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை *தக்ஷிணாயண வாசல்* வழியாகவும் எம்பெருமானை சேவிக்கலாம்!
சிபி சக்கரவர்த்திக்கு "ஸ்வேத வராகனாக" இவ்வெம்பெருமான் காட்சி அளித்ததால் *ஸ்வேதபுரி நாதன்* என்றும், இத்தலத்திற்கு *ஸ்வேதபுரி* என்றும் பெயர்!
இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய-சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் வந்து எம்பெருமான் அருகில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு!
"இந்திரனோடு பரமன் ஈசன் இமையவர் எல்லாம்,
மந்திர மாமலர் கொண்டு மறைந்தவராய் வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்"
-என்று போற்றுகிறார் பெரியாழ்வார்!
🙏🙏
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...