இன்றைய சூழலில் மனிதன் நிம்மதியாக நல்ல நிலையில் வாழ படாத பாடு பட வேண்டி உள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடி தான் முன்னுக்கு வர வேண்டி உள்ளது. காலையில் எழுந்து பணிக்கு செல்லும் மனிதனில் இருந்து தொழில் செய்பவர்கள்,வியாபாரம் செய்பவர்கள், என்று ஒவ்வொரு மனிதரும் இந்த பணத்தை சம்பாதிக்கவும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் படும் பாடு சொல்லி மாளாது. எப்பேர்பட்ட வசதி படைத்தவர்களாக இருந்தாலுமே கூட, யாரும் பணத்தை போதும் என நினைத்து சம்பாதிப்பதை நிறுத்தி விடுவதில்லை. பணம் எவ்வளவு இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று எண்ணம் தான் என்று அதிகம் இருக்கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பணம். இந்த பணமானது தடை இன்றி நம்மிடம் தங்குவதற்கு ஆன்மீகத்தில் எளிய பரிகார முறை உள்ளது அதை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நாளெல்லாம் பாடு பட்டும் உழைத்த பணம் கைக்கு வராமல் போனாலும்,வர வேண்டிய தொகை நமக்கு வராமல் இருந்தாலும் வந்த பணம் நம் வீட்டில் தங்கவும் எப்போதும் நம் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கவும் சிலவற்றை பரிகாரங்களை செய்தால் பணவரவை அதிகரிக்க முடியும் என்று ஆன்மீகத்தில் ஆணித்தரமாக நம்பப்படுகிறது. அப்படி நம்பி செய்யக் கூடிய ஒரு பரிகாரம்தான் இந்த மரிக்கொழுந்து பரிகாரம். மரிக்கொழந்துக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்ற ஒரு பழமொழியே இருக்கிறது. அந்த அளவிற்கு மரிக்கொழுந்த்திற்கு அனைத்தையும் மயக்கும் சக்தியும், வசியம் செய்யும் சக்தியும் அதிகம். அந்த வகையில் இந்த மரிக்கொழுந்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி மிக மிக அதிகம். இந்த மரிக்கொழுந்தை தான் இப்பொழுது நாம் பணம் ஈர்ப்பு பரிகாரத்திற்கு பயன்படுத்த போகிறோம். இதற்கு முதலில் நல்ல தூய்மையான வெள்ளை துணி எடுத்துக் கொள்ளுங்கள் (கர்ச்சீப் போல இருந்தால் போதும்). இந்த வெள்ளைத் துணியில் ஒரு கட்டு மரிக்கொழுந்தை வைத்து அதன் மேல் கொஞ்சம் தாழம்பூ குங்குமத்தை தூவி கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் தூள் செய்து இதன் மீது தூவி அப்படியே மூட்டை போல் கட்டி விடுங்கள். இதை உங்கள் பூஜை அறையில் வைத்து உங்கள் தெய்வத்தை வேண்டிக் கொண்டு நீங்கள் பணம் வைக்கும் அல்லது நகை வைக்கும் இடத்தில் இதை வைத்தால் பணம் நகை எல்லாம் இரட்டிப்பாக பெருகும். அதற்கான ஈர்ப்பை இந்த மரிக்கொழுந்து செய்து கொடுக்கும். மரிக்கொழுந்தை கொஞ்சம் உங்கள் மணி பரிசில் வைத்தாலும் பணம் சேரும் வாய்ப்பு அதிகம் இருக்கும். இது இருக்கும் இடத்தில் நிச்சயமாக பண நடமாட்டம் இருக்கும். மரிக்கொழுந்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை எடுத்து வீடும் முழுவதும் தெளித்தாலும் வீட்டில் இருக்கும் தரித்திரம், வாஸ்து பிரச்சனை எல்லாம் விலகி வீட்டில் தெய்வ கடாட்சம் அதிகரிக்கும். இந்த மரிக்கொழுந்தை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து மயிலிறகில் தொட்டு அந்தத் தண்ணீரை நாம் தலையில் தேய்த்து வந்தால் நம்மை தொடரும் திருஷ்டி, தோஷம் எல்லாம் விலகி போகும். இந்த மரிக்கொழுந்திற்கு இத்தனை தெய்வ அம்சங்களும், பண ஈர்ப்பு சக்தியும் உண்டு. பணம் கையில் தங்க வில்லை என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பயனடையுங்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment