இன்று எதேச்சையாக இளநீர் வாங்கலாம் என்று சென்றேன். அங்கே இந்த இளைஞர் பெயர் அபிமன் தள்ளு வண்டியில் இளநீர் விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் நான் இளநீர் வேண்டும் என்று கேட்டேன், அந்த இளைஞரும் வெட்டி கொடுக்கும் போது, மிகவும் கடினமாக இருக்கும் இந்த தொழிலில் ஒரு நாளில் எவ்வளவு இளநீர் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அந்த இளைஞர் ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 காய் வெட்டுவேன் என்று கூறினார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, December 11, 2022
இவரை போன்று ஊருக்கு ஓருவர் இருந்தால் போதும் .
மீதி நேரத்தில் என்ன செய்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த கல்லூரியில் படிக்கிறாய்? என்ன படிக்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர் BA Philosophy படிப்பதாகவும் அவர் தாம்பரத்தில் ஒரு தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடித்துவிட்டு மூன்றாம் ஆண்டு படிப்பதாகவும் கூறினார்.
எனக்கு கேட்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வாறு படித்துக் கொண்டே இந்த வேலையில் இருக்கிறீர்களே எப்படி என்று கேட்டேன். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆனால் இங்கு படிப்பதற்காக வந்திருக்கிறேன், வாரம் இரு தினம் வேலை செய்தால் 1000/- ரூபாய் கிடைக்கும் அடுத்த ஒருவாரம் அதைவைத்து சமாளித்து கொண்டு கல்லூரிக்கு செல்கிறேன் என கூறினார். கேட்பதற்கு மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.
காலேஜில் படிப்பதற்கு உனக்கு எவ்வளவு செலவாகிறது என்று கேட்டேன்? அதற்கு வருடத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்று கூறினார்.
மூன்று ஆண்டுகள் எனது வீட்டின் தெருவில்தான் அந்த இளைஞர் இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறார் ஆனால் நான் கவனிக்க தவறிவிட்டேன். இன்று அந்த இளைஞரை எனக்கு காண்பித்த அந்த இறைவனுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஆகவே இந்த மூன்றாம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தையும் மற்றும் அவரின் மேற்ப்படிப்புக்கான தொகையை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment