செய்யாத கொலைக்காக நான்கு வருடம் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தார் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சி என்பதால் மேல் முறையீடு லண்டன் ப்ரிவி கவுன்சிலில் நடந்தது . அவர் மனைவி மதுரம் அவர்கள், இந்த கஷ்டத்துக்கு என்ன தீர்வு, யாராவது ஜோதிடர் ட்ட கேளேன் என கவிஞர் வாலி அவர்களிடம் சொல்ல, அவர், "நான் ஒருவரை கேட்டேன், ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வாருக்கு ஒரு மண்டலம் எள் தீபம் போட்டு,பிரதட்சணம் பண்ணினால் அவர் விடுதலை ஆவாராம். ஆனால்,நம்பிக்கையோடு பண்ண வேண்டும்.சந்தேகத்தோடு சக்கரத்தாழ்வாரை சுற்ற கூடாது " என வாலி சொல்ல, அந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்கிறார் மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் நிரபராதி என விடுதலை ஆகிறார். ,(நினைவு நாடாக்கள் புத்தகத்தில் கவிஞர் வாலி அவர்கள் இதை எழுதியுள்ளார்).
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, February 6, 2023
பரிகாரங்கள் பலன் தருமா ? கோவிலுக்கு போனால் கஷ்டம் தீருமா ?
அவர் தான் கொலையே செய்யவில்லையே... பிறகு ஏன் சிறை தண்டனை என்ற கேள்விக்கும் கவிஞர் வாலியே பதில் சொன்னார். கொலை செய்யாவிட்டாலும், "அவனை என்ன பண்றேன் பாரு...அவனை சும்மா விட மாட்டேன்" என மனதால்,வார்த்தைகளால் தீங்கு நினைத்ததற்கான தண்டனை அது.
ஆக, எவ்வளவு பெரிய துன்பம் என்றாலும், நீங்கள் செய்யும் பரிகாரங்கள், நீங்கள் கும்பிடும் சாமி, ஆலய வழிபாடு இவையெல்லாம் உங்களை நிச்சயமாக காப்பாற்றும். ஆனால் அதற்கு நீங்கள் மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான தகுதி.
ஆதன் ஆன்மிகம் - ல் இது குறித்து நான் பேசிய வீடியோ கமெண்ட்- ல்...
(அந்த சக்தி வாய்ந்த ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எடுத்த புகைப்படம்)
ஆன்மிகச் சொற்பொழிவாளர் என்பதாலேயே நான் சந்திக்கும் ஏளனங்கள் நிறைய. ஆனால், நாள் தவறாமல் நான் படிக்கும் கோளறு பதிகமும் , ஆலய வழிபாடும் தான் எல்லா இக்கட்டான தருணங்களில் இருந்தும் என்னை காக்கிறது என உணர்ந்திருப்பதாலேயே, எல்லா துன்பங்களிலிருந்தும் காக்கிற அற்புதமான பரிகாரமுறைகள்,செல்ல வேண்டிய கோவில்கள் பற்றி தொடர்ந்து என் சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்... பொதுவான பரிகாரமாக சொல்வதை விட, ஒருவரின் ஜாதகம் தெரிந்து சொல்வது இன்னும் பலன் அதிகம் அளிக்கும் என்பதாலேயே ஜோதிடமும், வாஸ்துவும் முறைப்படி படிக்க ஆரம்பித்தேன்.
திருமுறைகள்,பிரபந்தங்கள் சொல்கிற ஆலயங்களின் பெருமைகளை பேசுவது எனக்கு கிடைத்த பெரும் பேறு...
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
எல்லோருக்கும் நிறைய அன்பு.... நல்லாருப்போம் !
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment