Tuesday, April 5, 2016

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகளும் !

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும்அதிலிருந்து அவர்களை மீட்கும் வழி முறைகளும்
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத் துக்கொண்டு யாருடனும் பேசாமல் உம் மென்று இருப்பார்கள். சில குழந்தைக ள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமா கவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டு வார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இத ற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று
குழந்தை மனநல மருத்துவ ர்கள் கூறுகின்றனர்.
அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடை பெறும் குழப்பங்கள், வாக்கு வாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவி னர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப் பிராணி களின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறா கப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டார த்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மன உணர் வுகள் சில நேரங்களில் குழந்தையை யும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்ப டும் பக்க விளைவுகள்.
– இது போன்ற காரணங்களினால் குழந் தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளு க்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அல்ல து சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகு விரைவில் மன அழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழ ந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு வி ரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர் கள் அல்லது உறவினர்கள் மூலமாக வோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்து ம். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவ ர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறி வதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும்நேரத்தில் சில விஷயங் கள் மிகவும் முக்கியமான வை.
அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மி கவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வத ற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது , எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போ தும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த் தை களைக் கொட்டக்கூடா து.
3. அவர்கள் நினைப்பதை அ வர்களது சொந்த வார்த்தை களின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திரு க்க வேண்டும். அவர்கள் பேசுவதை க் கொண்டு எப்படியெல்லாம் கற்ப னை செய்திருக்கிறார்கள் என்பதை ப் புரிந்து கொள்ள வேண் டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷய த்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கே ட்கலாம். ஆனால் அது அவர்கள் பே சுவதை தடுப்பதாகவோ, எண்ணத் தை திசை திருப்புவதாகவோ இருக் கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக் கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத் தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவ னித்து வருகிறேன். நீ மிகவும் கவலை யோடு இருக்கிறாய் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதன் மூ லமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக் கறை காட்டுகிறார்கள் என்பதை குழ ந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
இந்த எண்ணம் அவர்கள் மன அழுத் தத்தில் இருந்து விடுபட பெரிதும் உத வும். இவ்வாறு அவர்களுடன் கலந்து ரையாடி மனஅழுத்தத்திற்கான கார ணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங் கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.இதற்காக நீங்கள் செய்ய வேண் டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறை கள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்க ளை விடுவிப்பதற்காக நீங்கள் செய ல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெற முடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத்தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண் டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாண வனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்ப து, புதிய இடங்களுக்கு அழைத்துச் செ ல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடு படுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந் தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுப டுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர் பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மன அழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகே நோயிலி ருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மன அழுத்தத்தை அதிகமாக்கு கிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத் திருக்க உதவு கிறது என்பதைத் தெளி வாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழு த்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என் பதை அவர்களுக்குசொல்லிக் கொடு ங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதைலேசாக்கிக் கொள்வார்க ள். ஆண் குழந்தைகளுக் கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங் களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமான தோ, அல்லது நடக்கக் கூ டாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய் வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்புக்களை ஏற்படு த்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர் களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் கார ணம் காட்டி அதைத் தடுக்காதீ ர்கள். இந்த மாறுதல் அந்த கு ழந்தைக்கு மிகவும் அவசியமா ன சிகிச்சைபோன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய் யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். ச ரியா ன முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்டபோது மருத்துவரி டம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித் துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகை களை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது,போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்ச லைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப் பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவி ல்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாம லும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி வி டுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்கா தீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியா ன மருத்துவரிடம் செய்யா மல் போனால் மற்றவர்க ளை வேண்டுமானால் நீங் கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையி ன் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங் கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக மு க்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண் பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையி ன் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவிசெய்யும் என்பதைப் புரிந்து கொள்ளு ங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர் களும், உங்கள் குழந்தை மீது அக்க றை கொண்டவர்களும் நீங்கள் மரு த்துவரின் உதவியை நாடுவதை ஆத ரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியா னது தான் என்று பாராட்டுவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...